Author Topic: கவின் மலரின் கவிதை பூங்கா 2  (Read 527 times)

Offline NiThiLa

                                              வாழ்வில் சிறக்க

விதையின் வீரியம்
வேரின் உறுதி 
தண்டின் நிமிர்வு
இலை போல ஊழைப்பு
பூ போல மனம்
காய் அளவு பயன்
கனி போல இனிமை
இவை எல்லாம் வேண்டும் வாழ்வில் சிறக்க



                                    இதய களவாணி


உன் விரல் பிடித்து
உன் அடி தொடர்ந்து
உன் தோள் சாய்ந்து
உன்னோடு
உனக்காக உருகி
உனக்காக மருகி
உன்னை காணும் பொழுதில் மலர்ந்து
உயிர் மூச்சு உள்ள வரை வாழ
உன் விரல் பிடித்து
என் இதயம் கோர்த்து
என்னுள்
எனக்காக
என்னுடன் வாழ வருவாயா
என் இதயம் களாவடியவனே



                                            வேண்டும் என்று வேண்டுகிறேன்

   
தெளிவான  சிந்தனை
நடு நிலையான மனது
குன்றாத தன்னம்பிக்கை
வெற்றியளிக்கும் வாய்ப்புகள்
நியாயமான அவா
சரியான செயல்கள்
இனிமையான குணம்
பகுத்தறிவு
ஈகை பண்பு
இவை அனைத்திற்கும் மேல்
தாய் தந்தை மேல் குறையாத பக்தி
இவை எல்லாம் வேண்டும் என்று வேண்டுகிறேன்
தினமும் அந்த பேரருளானிடம்




                                                        தாய் அன்பு


தாய் இவள் அன்புக்கு
ஆதியும் இல்லை
அந்தமும் இல்லை
அகிலத்தையே
மயங்க வைக்கும்
அவள் அன்பு எனும்இசை
பத்து மாதம் சுமந்து
பத்தியமாய் உணவு உண்டு
சுய விருப்பத்தை தியாகம் செய்து
வலி பொறுத்து வழி தருகிறாள்
இந்த உலகத்திற்கு வர
பசித்த போது பாலுட்டி
பயந்த போது உறுதிகொடுத்து
மெத்தையாய் மடி தாங்கி
பண்போடு ஆளாக்கி
புதிராகும் சூழ்நிலையில்
புரிய வைத்து
பழுதில்லா பழமையை
பயிர் செய்து
பார் போற்றும் குணங்களோடு
பார்ப்போர் வியக்கும் படி
உருவாக்கி
எத்தனை வளர்ந்தாலும்
பார்வையிலேயே என்னை பதித்து விடும்
அவளுக்கு இணை
இது வரை இல்லை இந்த ஜகத்திலே


பின் குறிப்பு:
பிழை இருப்பின் பொறுத்துக்கொள்ளவும்

« Last Edit: September 04, 2015, 04:41:09 PM by NiThiLa »
bhavadhi

Offline JoKe GuY

Re: கவின் மலரின் கவிதை பூங்கா
« Reply #1 on: September 01, 2015, 10:53:02 AM »
உங்களின் கவிதை பூங்கா மேலும் வளர மனமார்ந்த வாழ்த்துகள்

உன் இதயம் ரோஜாமலராயிருந்தால் பேச்சில் அதன் வாசனை தெரியும்

Offline gab

Re: கவின் மலரின் கவிதை பூங்கா
« Reply #2 on: September 01, 2015, 12:03:27 PM »
உங்கள் கவிதைகள் தொடர்ந்து மிளிர வாழ்த்துக்கள் நித்திலா.