Author Topic: !!!சிறைச்சாலை!!!  (Read 945 times)

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 118
  • Total likes: 118
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
!!!சிறைச்சாலை!!!
« on: December 26, 2011, 10:35:18 PM »

முன்பு
சிறை வாழ்கை
கொடியது
வேண்டாம் இந்நரகம்
இனி ஒரு முறை..
குற்றம் செய்து துடித்து
திருந்திய காலம் ..

இன்று
மாமியார் வீடாய்
மாறி போனது நிஜமே...

எது இல்லை
சிறையில்..
பணம் இருந்தால்
பத்தும் வரும் சிறைக்கு...

மாதம் மாமாக்கு
மாமுல் இரண்டாயிரம்
தண்ணி முதல்
கஞ்சா வரை அனுமதி

கஞ்சியும் களியும்
மலையேறி போச்சு
அறைக்குள்ளே சமைக்கும்
வசதியும் உண்டாம்..
தனியே விலை(மாமுல்) பட்டியல்..
சகலவசதிகள்..

கைபேசி இல்லாத
கைதியே இல்லை...
வெளியே இருந்து
துன்ப படுவதைவிட
உள்ளே இருப்பதே மேல்..
கைதியின் வாசகம்..

திடீரென்று நடக்கும்
ஒருபரிசோதனை..
மூட்டை மூட்டையாக
அள்ளி செல்வர்கள்
கைதிகளிடம் கைபற்றியது என்று ..

மாமுல் வாங்கிய
மன்னருக்கு
பார்த்த வேலைக்கு
களைப்பு நீங்க
ஊதியத்தோடு சஸ்பெண்ட்...
ஒய்வு எடுக்க
அரசாங்கம் தரும் சலுகை..

தியாகிகள் செக்கு இழுத்து
துடித்த சிறை
கஞ்சா இழுக்கும் சிறையாய்
போனது இன்று..

யார மீது குற்றம்???
பணத்தை கொண்டு
பகலை இரவாக்கலாம்
என நினைக்கும்
குற்றவாளிகள் மீதா??
குற்றவாளியோடு கூட்டு
சேரும் அதிகாரி மீதா??
எங்கும் அவலம்..
மாறவில்லை இன்னமும்...


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline Global Angel

Re: !!!சிறைச்சாலை!!!
« Reply #1 on: December 26, 2011, 11:14:30 PM »
அதிகாரிகள் மீதுதான் தண்டனை கடுமையாக இருந்தால்தான் திருந்துவார்கள்
                    

Offline RemO

Re: !!!சிறைச்சாலை!!!
« Reply #2 on: December 27, 2011, 02:52:19 AM »
muthala irunthathelam theriyaamal sulnilaiyin kaaranama kaithiyaana elaikal

aanal ipa irukurathelam oolal panitu vantha arasiyalvaathikal thaana athan iththana maatram