பகிர்ந்தோம் 
ஆம் நாங்கள் பகிர்ந்தோம்
எங்கள் சுக துக்கங்களை, 
எங்கள் துயரத்தை, 
பிறர் பெற்ற சந்தோசம் , 
விளையாட்டு பொருட்களை, 
விளையாடிய நேரத்தை, 
நம் உடைமைகளை, 
நம் உயிரை .
ஆம் நாங்கள் அனைத்தையும் பகிர்ந்தோம்.
நாங்கள் பகிர ஆரம்பித்ததோ கூட்டாஞ்சோற்றில், 
இன்று பகிர்ந்து கொண்டு இருப்பதோ அளவில்லா அன்பை. 
அன்று பகிர ஆரம்பித்தது உயிர் நட்பை 
என்றும் பகிர்வோம் எங்கள் உயிர்மூச்சை. 
நட்பிற்காக என்றும் பகிர்வோம் உயிர் மூச்சை! 
  -என்றும்  அன்புடன் அனானிமஸ்1989