Author Topic: ~ செலவின்றி அழகாக ஜொலிக்க! ~  (Read 631 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226857
  • Total likes: 29016
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
செலவின்றி அழகாக ஜொலிக்க!



சருமத்தில் உள்ள கருமையை போக்க கற்றாழை ஜெல்லில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து முகம் மற்றும் கழுத்தில் தடவி 15 நிமிடம் ஊறவைத்து பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால் சருமத்தில் உள்ள கருமையை விரைவில் போக்கலாம்.முகத்தில் ஆங்காங்கு புள்ளிகள் காணப்பட்டால் அதனை போக்க கற்றாழை ஜெல்லுடன் சிறிது ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து முகத்தில் தடவி 15 -20 நிமிடம் ஊறவைத்து பின் சிறிதுநேரம் மசாஜ் செய்து நீரால் கழுவினால், கரும்புள்ளிகள் மற்றும் பருக்களால் வந்த வடுக்கள் நீங்கி விடும்.

Beauty-is-skin-deeper

எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள் கற்றாழையில் உள்ள முட்களை நீக்கிவிட்டு, நீரில் போட்டு வேகவைத்து இறக்கி, பேஸ்ட் செய்து அதில் சிறிது தேன் சேர்த்து முகத்தில் தடவி 20 நிமிடம் ஊறவைத்து கழுவ வேண்டும். இப்படி வாரம் ஒருமுறையாவது செய்து வந்தால் நல்ல மாற்றத்தை காணலாம். சென்சிடிவ் சருமம் உள்ளவர்கள் கற்றாழை ஜெல்லுடன், சிறிது வெள்ளரிக்காய் ஜூஸ், தயிர் மற்றும் ரோஸ் எண்ணெய் சேர்த்து பேஸ்ட் செய்து முகம் மற்றும் கழுத்தில் தடவி 15 நிமிடம் ஊறவைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி செய்து வந்தால் சருமத்தில் உள்ள அழுக்குகள், கிருமிகள் வெளியேறுவதுடன், சரும அரிப்புகள் ஏற்படாமல் இருக்கும்.

வறட்சியான சருமத்தினர் கற்றாழை ஜெல்லில் காட்டேஜ் சீஸ், பேரிச்சம் பழம் மற்றும் வெள்ளரிக்காய் சேர்த்து பேஸ்ட் செய்து எலுமிச்சை சாறு சேர்த்து முகத்தில் தடவி 30 நிமிடம் ,ஊறவைத்து பின் கழுவ வேண்டும். இப்படி செய்தால் சருமத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி சருமம் பொலிவோடு மின்னும். பளிச்சென்ற முகத்தை பெற கற்றாழை ஜெல்லில் சிறிது வெள்ளரிக்காய் மற்றும் நட்ஸ் சேர்த்து பேஸ்ட் செய்து பின் 10 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனால் இறந்த செல்கள் நீங்கிவிடும்.