Author Topic: ~ சோயா பிரியாணி ~  (Read 367 times)

Offline MysteRy

~ சோயா பிரியாணி ~
« on: July 29, 2015, 11:45:58 AM »
சோயா பிரியாணி



தேவையான பொருட்கள்:

பாசுமதி அரிசி - 2 கப், சோயா உருண்டைகள் - 15, பெரிய வெங்காயம் - 3, தக்காளி - 3, பச்சை மிளகாய் - 1, இஞ்சி - 1 துண்டு, பூண்டு - 5 பல், புதினா - அரை கட்டு, மல்லித்தழை - கால் கட்டு, மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன், சற்று புளிப்பான தயிர் - கால் கப், எலுமிச்சம் பழம் - 1 மூடி, பட்டை, லவங்கம், ஏலக்காய் - தலா 2, நெய் - 1 டேபிள் ஸ்பூன், எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன், உப்பு - தேவைக்கு.

செய்முறை:

அரிசியை கழுவி ஒன்றுக்கு ஒன்றரை என்ற அளவில் தண்ணீர் சேர்த்து ஊற வையுங்கள். சோயாவை கொதிக் கும் நீரில் பத்து நிமிடம் போட்டெடுத்து குளிர்ந்த நீரில் இரு முறை அலசி எடுங்கள். வெங்காயம், தக்காளியை நீள நீளமாக நறுக்குங்கள். மிளகாயை கீறி வையுங்கள். இஞ்சி, பூண்டை அரைத்து வையுங்கள். புதினா, மல்லியை சுத்தம் செய்து வையுங்கள். குக்கரில் நெய், எண்ணெயை காய வைத்து பட்டை, லவங்கம், ஏலக்காயை தாளித்து பின்னர் வெங்காயம், சிட்டிகை உப்பு சேர்த்து நன்கு நிறம் மாறும் வரை வதக்குங்கள். பிறகு தக்காளி, மிளகாய்த்தூள் சேர்த்து மூன்று நிமிடம் வதக்கி தயிர், எலுமிச்சம் பழச்சாறு சேருங்கள். தயிர் நன்கு கொதித்து எண்ணெய் கசிந்ததும் ஊற வைத்த அரிசியை தண்ணீ ருடன் சேருங்கள். தேவையான உப்பு சேர்த்து மூடி வெயிட் போடுங்கள். ஒரு விசில் வந்ததும் தீயைக் குறைத்து பத்து நிமிடம் வைத்து இறக்குங்கள். சூடாக பரிமாறுங்கள்.