Author Topic: கற்பை சூரையாடும் முன் விழித்துக்கொள்ளுங்கள்!  (Read 1009 times)

Offline Yousuf

திருமணத்துக்கு முன்பு செக்ஸ் உறவு வைத்துக்கொள்வது தவறல்ல என்று நடிகை குஷ்பு 4 ஆண்டுகளுக்கு முன்பு பரபரப்பான பேட்டி அளித்தார். இது சர்ச்சையை கிளப்பியது. தமிழகமெங்கும் பெண்கள் அமைப்பினர் குஷ்புக்கு எதிராக போராட்டங்கள் நடத்தினர். வெவ்வேறு கோர்ட்டுகளில் 22 கிரி மினல் வழக்குகளும் தொடரப்பட்டன.

இந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரி ஐகோர்ட்டில் குஷ்பு மனுதாக்கல் செய்தார். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தார்.

தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன், நீதிபதிகள் தீபக்வர்மா, பி.எஸ்.சவுகார் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இவ்வழக்கை விசாரித்தது.

வழக்கு விசாரணையும், வக்கீல் விவாதத்தையும் நேரில் காண குஷ்பு சுப்ரீம் கோர்ட்டுக்கு வந்து இருந்தார். ஆரஞ்சு நிறத்தில் சல் வார்காமீசும் பச்சை நிற துப்பாட்டாவும் அணிந்து எளிமையாக காணப்பட்டார். நெற்றியில் பெரிய பொட்டு வைத்து இருந்தார்.

கோர்ட்டில் முன் இருக்கையில் உட்காருவதற்கு அவருக்கு இடம் ஒதுக்கப்பட்டு இருந்தது. இப்படி மனுதாரர்கள் முன் வரிசையில் அமர்வது அபூர்வம். பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் காரணமாக முன் பகுதியில் அமர்வதற்கு யாரும் எளிதில் அனுமதி பெற்று விட முடியாது.

அங்கு 5 மணி நேரம் உட்கார்ந்து வக்கீல் விவாதத்தை கேட்டார். அப்போது நீதிபதிகள் குறுக்கிட்டு பேசிய கருத்துக்கள் குஷ்புவுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

புகார் மனுதாரர்களின் வக்கீல்கள், குஷ்பு கருத்தால் இளைய சமுதாயம் கெட்டு விடும். நாட்டின் பண்பாடு, கலாசாரம் வீழ்ச்சி அடையும் என்றனர்.

அப்போது நீதிபதிகள் கூறுகையில் திருமணத்துக்கு முன்பு செக்ஸ் உறவு வைத்துக்கொள்வதோ திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்வதோ குற்றம் அல்ல என்றனர். அவற்றை தடை செய்ய சட்டங்கள் இல்லை என்றும் தெரிவித்தனர். வயது வந்த இருவர் சேர்ந்து வாழ விரும்பினால் அதில் என்ன தவறு. சேர்ந்து வாழ்வது குற்றம் அல்ல. திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்வது என்பது வாழும் உரிமை. அது அடிப்படை உரிமை என்று அரசியல் சட்டம் கூறுகிறது.

குஷ்பு கூறியது அவரது தனிப்பட்ட கருத்து. அது எப்படி குற்றமாகும். என்றெல்லாம் பரபரப்பான கருத்துக்களை வெளியிட்டனர். விவாதங்களை கவனமாக கேட்டுக்கொண்டு இருந்தார் குஷ்பு.

தீர்ப்பை நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

செய்தி- மாலை மலர்

குஷ்புவுக்கு சட்டத்தை தரைவார்த்து கொடுத்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் இனிவரும்காலங்களில் கீழ்கண்டவைகளுக்கும் சட்டம் வகுப்பார்களா?

அன்னிய ஆடவருடன் குடும்பம் நடத்தி அதை தவறு இல்லை என்று குஷ்பு வாதிட்டதற்காக உச்சநீதிமன்றம் கணம் கோர்டார் அவர்கள் சட்டத்தை குஷ்புவுக்கு ஆதரவாக வெளியிட்டது! இதைத் தொடர்ந்து மற்ற நடிகைகளும் குரள் எழுப்பினால் நிலைமை என்னவாகும்??????

கீழ்கண்டவைகளை சிந்தியுங்கள் (இனிவரும் காலங்களில்)

நிர்வாண குளியல் சட்டம் வகுப்பார்களா?

ஒரு சினிமா பெண் கூத்தாடி குளியலரையில் நிர்வாணமாக குளித்துவிட்டு அதை தொலைக்காட்சியில் விளம்பரப் படுத்தியிருந்தாள்! இந்த நடிகை தான் இவ்வாறு நிர்வாணத்தை வெளிப்படுத்துவது போன்று ஒவ்வொரு பெண்ணும் தொலைக் காட்சியில் நிர்வாண குளியல் காட்சிகளை வெளிப்படுத்த வேண்டும் என்று குரள் எழுப்பி அதற்காக உச்சநீதிமன்றத்தை அணுகி குஷ்புவுக்கு ஒரு நியாயம் எனக்கு ஒரு நியாயமா? என்று வாதிட்டால் இந்த நீதிபதிகள் என்ன செய்வார்கள் நிர்வாண குளியல் சட்டம் வகுப்பார்களா?

கொஞ்சி குலாவும் சட்டம் வகுப்பார்களா?

ஒரு சினிமா பெண் கூத்தாடி நித்யானந்தாவுடன் கொஞ்சி குழாவியிருந்ததை தொலைக்காட்சியில் வெளிப்படுத்தியிருந்தாள். அதை நியாயப்படுத்தி ஒவ்வொரு பெண்ணும் நித்யானந்தா உட்பட அனைத்து சாமியார்களிடமும் (மடையர்களிடமும்) கொஞ்சி குழாவ வேண்டும் என்று குரள் எழுப்பி அதற்காக உச்சநீதிமன்றத்தை அணுகி குஷ்புவுக்கு ஒரு நியாயம் எனக்கு ஒரு நியாயமா? என்று வாதிட்டால் இந்த நீதிபதிகள் என்ன செய்வார்கள் கொஞ்சி குலாவும் சட்டம் வகுப்பார்களா?

விபச்சாரிகளுக்கான சட்டம் வகுப்பார்களா?

சிகப்பு விளக்கு பகுதியில் உடலை விற்பனை செய்யும் விபச்சாரிகள் இந்த பகுதிகளுக்கு ஆண்கள் வரத்து குறைந்தவிட்டது மனைவிகள் அனுப்புவதில்லை இதனால் விபச்சாரர தொழில் பாதிப்படைகிறது என்று கூறி  ஆண்கள் இங்கு தாராளமாக வந்து போக வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தை அணுகி முறையிட்டால் அதற்காக இந்த நீதிபதிகள் ஆண்கள் உரிமை என்ற தலைப்பில் விபச்சார விடுதிகளுக்கு தாராளமாக சென்றுவரவும், மணைவிமார்கள் தடுக்கக்கூடாது என்றும்  சட்டம் வகுப்பார்களா?

இந்த நீதிபதிகள் தங்கள் மனைவிமார்களையும், மகள்களையும், உடன் பிறந்த சகோதரிகளையும், பெற்ற தாயையும் சமுதாத்தில் உள்ள ஆண்களுடன் தன்னந்தனியாக குடும்பம்நடத்தி வாழ்ந்துகாட்டுமாறு ஏவுவார்களா? அல்லது பழக விடுவார்களா?

ஊருக்கு ஒரு நியாயம் இவர்களுக்கு ஒரு நியாயமா?

கூத்தாடிகளுக்கு சட்டத்தை தாரைவார்த்துக்கொடுத்து இந்திய கலாச்சாரத்தை  அவமானத்திற்குள்ளாக்கிய நீதிபதிகளுக்கு எதிராக யாரும் குரள் எழுப்பமாட்டார்களா?

ஒரு பெண் இந்திய குடியரசுத்தலைவியாக ”பிரதீபா பாட்டி” இருக்கும்போது இப்படிப்பட்ட கேவலமான சட்டம் வகுத்துள்ளார்கள் இது பெண்ணிணத்திற்கு அவமானம்!

தமிழர் தலைவர் என்று மார்தட்டிக்கொண்டு இருக்கும் கலைஞரின் ஆட்சிக்காலத்தில் தமிழ் கூத்தாடியினால் இந்த விபச்சார சட்டம் அமுலுக்கு வந்ததுள்ளது! மார்தட்டிக்கொள்ளும் தலைவருக்கு அவமானம்!

தமிழ் எங்கள் உயிர் என்று கூறும் பாட்டாளி தலைவருக்கு கூத்தாடி தமிழச்சியின் மூலம் கலங்கம் ஏற்பட்டது தமிழுக்கு அவமானம்!

இது அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அவமானம்!

அனைத்து சமுதாய மக்களையும் இழிவுபடுத்தும்விதமாக ஒருதலைப்பட்ச தீர்ப்பு வழங்கிய இந்த நீதிபதிகளை பதவிநீக்கம் செய்ய அனைத்து ஜாதி, சமய, மத, மார்க்க சகோதரர்கள் குரள் எழுப்பமாட்டார்களா?

விழித்துக்கொள் சமுதாயமே!

விழித்துக்கொள்


இனி விபச்சாரிகள் தினத்தையும் அனுமதிப்பார்கள் கட்டிய மனைவிகளையும் ஓடவிடுவார்கள்

சட்டம் வகுத்து உன் தாய், மனைவி, சகோதரி, மகள் ஆகியோரின் கற்பை சூரையாடுவதற்கு முன் விழித்துக்கொள்!

எச்சரிக்கை! எச்சரிக்கை! எச்சரிக்கை!

Offline RemO

unmai thaan mams, future la ethuvumey thapilai nu sonalum soluvanga

Offline Yousuf

நன்றி ரெமோ மாம்ஸ்!