Author Topic: ~ கிறங்க வைக்கும் கீரை புலாவ்! ~  (Read 388 times)

Online MysteRy

கிறங்க வைக்கும் கீரை புலாவ்!



தேவையானவை:

பாசுமதி அரிசி சாதம் - 2 கப், வேகவைத்த கேரட், பட்டாணி, மக்காச்சோளம் (சேர்த்து)  ஒரு கப், நறுக்கிய பாலக்கீரை - ஒரு கப், மிளகாய்த்தூள் - சிறிதளவு, நறுக்கிய வெங்காயம் - ஒரு கப், பூண்டு - 8 பற்கள், பச்சை மிளகாய் - ஒன்று (பொடியாக நறுக்கவும்), உடைத்த முந்திரி, சீரகம், நெய்  - தலா ஒரு டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

வாணலியில் நெய் விட்டு... முந்திரியை வறுத்து, சீரகம் சேர்த்து தாளிக்கவும். வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், கீரையைச் சேர்த்து வதக்கவும். இதனுடன் உப்பு, மிளகாய்த்தூள், பட்டாணி, மக்காச்சோளம், கேரட் சேர்த்து வதக்கி, சாதத்தை சேர்த்து முள்கரண்டியால் கிளறவும். கொத்தமல்லித்தழையை தூவி பரிமாறவும்.