அதிகாரம் : 19 - புறங்கூறாமை
குறட்பா : 183
புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்
அறம்கூறும் ஆக்கம் தரும்
விளக்கம் :
ஒருவன் இல்லாதபோது அவனைப் பழித்துக் கூறி, அவனைக் காணும் போது நல்லவனாக நடித்து உயிர் வாழ்தலினும், அவ்வாறு செய்யாமல் இறந்து போதல் அவனுக்கு அறநூல்கள் கூறும் ஆக்கத்தைத் தரும்.
அடுத்த குறள்:
ஒருமைக்கண் ________ _______ ஒருவற்கு
________ ஏமாப் புடைத்து.