Author Topic: ~ முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை போக்கும் பேஷியல் ஸ்க்ரப் ~  (Read 993 times)

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 227484
  • Total likes: 29061
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை போக்கும் பேஷியல் ஸ்க்ரப்



சிலருக்கு முகத்தில் கரும்புள்ளியும் கருந்திட்டுகளும் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும். இதனால் அவர்கள் வெளியில் தலைகாட்ட முடியாமல் தவிக்கின்றனர். இவர்களுக்கு என்று வீட்டில் செய்யக்கூடிய எளிய பேஷியல் ஸ்க்ரப் உள்ளது.

இதை பயன்படுத்தி உங்கள் சருமத்தில் உள்ள கரும்புள்ளியையும், கருந்திட்டுக்களையும் போக்கிடுங்கள். உருளைக்கிழங்கு துருவல் சாறு – 1 டீஸ்பூன், தக்காளி விழுது – அரை டீஸ்பூன் இரண்டையும் கலந்து கொள்ளுங்கள். இந்த பேஸ்ட்டை கழுத்திலும் முகத்திலும் தடவி 15 நிமிடம் கழித்துக் கழுவுங்கள். தொடர்ந்து இதைச் செய்து வந்தால், சில வாரங்களிலேயே வித்தியாசத்தை உணர முடியும்.

ரொம்ப நாட்களாக முகத்தை சரிவர பராமரிக்காதவர்களின் முகத்திலுள்ள செல்கள் இறந்து போய் முகம் பொலிவிழந்து விடும். அவர்களுக்கான ஸ்பெஷல் சிகிச்சை இந்த தக்காளி பேஷியல் ஸ்க்ரப். ஒரு தக்காளியின் சாறுடன் கால் டீஸ்பூன் ரவையைக் கலந்து கொள்ளுங்கள். இதை நன்றாக முகத்தில் தேய்த்துக் கழுவுங்கள்.

தொடர்ந்து இதைச் செய்து வந்தால், முகம் சூரியனாகப் பிரகாசிக்கும். வெயில் காலத்தில் வெயில் சென்று வந்தவுடன் தக்காளியை இரண்டாக வெட்டி அதை முகத்தில் தடவி வந்தால் முகம் பிரகாசமாகும். தக்காளியில் சர்க்கரையை தொட்டு முகத்தில் தேய்த்தால் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் உதிர்ந்து சருமத்தில் உள்ள அழுக்குகளை போக்கும். இதனை வாரம் ஒருமுறை செய்து வரலாம்.