பாடத்திட்டத்தில் இராமாயணம்
""விடிய விடிய ராமாயணம் கேட்டுவிட்டு, விடிஞ்சதும் கேட்டால் சீதைக்கு ராமன் சித்தாப்பா என்று சொல்கிறாயே?'' -கிராமப்புறங்களில் உள்ள பெரியவர்கள் இப்படிக் கேட்பது உண்டு. இராமாயணக் கதையை சரியாகக் கேட்கவில்லையா, அல்லது கதை சொன்னவர் சரியாகச் சொல்லவில்லையா என்பதுதான் இந்தக் கேள்விக்கான உட்பொருள். இராமாயணம் என்பது இந்திய மக்களோடு பல நூற்றாண்டு காலமாக இணைந்திருக்கும் இதிகாசம். வழிவழியாக மக்களுக்குச் சொல்லப்பட்டு வந்திருக்கிறது.
சமஸ்கிருதத்தில் வால்மீகி சொல்லிலியிருக்கிறார். தமிழில் கம்பர் சொல்லிலியிருக்கிறார். இன்னும் துளசிதாசர், கபீர்தாசர் உள்பட பலரும் இராமாயணத்தை அவரவர் மொழியில் சொல்லிலியிருக்கிறார்கள். திரைப்படங்களால் புகழ்பெற்ற கவிஞர் வாலிலி, "அவதார புருஷன்' என்ற தலைப்பில் ராமாயணத்தை புதுக்கவிதை வடிவில் தமிழில் எழுதியிருக்கிறார். சரித்திரப் புதினங்கள் எழுதும் கோவி.மணிசேகரன், கோவிராமாயணம் என்றே தன்னுடைய ராமாயணப் படைப்பைத் தந்திருக்கிறார். இப்படி இந்தியா முழுவதும் இன்றும் பலவிதங்களில் ராமாயணங்கள் வெளிப்பட்டு வருகின்றன. எழுத்துவடிவிலான ராமாயணங்கள் மட்டுமின்றி, வாய்மொழியாகவே பாட்டும் கதையுமாகச் சொல்லப்படும் ராமாயணங்களும் இந்திய கிராமப்புறங்களில் வழக்கத்தில் உள்ளன.
இதனடிப்படையில், மொழியியல் அறிஞரும் நாட்டுப்புறவியல் வல்லுநருமான ஏ.கே.ராமானுஜன், "300 இராமாயணங்கள்-5 உதாரணங்களும் 3 மொழிபெயர்ப்புப் பற்றிய சிந்தனைகளும்' என்ற தலைப்பில் எழுதிய கட்டுரை டெல்லிலிப் பல்கலைக்கழகத்தில் வரலாறு இளங்கலைப் பட்டப்படிப்பிற்கான பாடமாக வைக்கப்பட்டிருந்தது. இந்தப் பாடம் தற்போது நீக்கப் பட்டுவிட்டது. அதற்கானப் பின்னணி என்பது சிந்தனையாளர்கள் மீதும் வரலாற்று ஆய்வுகளின் மீதும் தொடுக்கப்படும் தாக்குதலாகவே இருக்கிறது.
2008-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மாணவர் பிரிவான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தின் செயல்பாட்டாளர்கள் டெல்லிலி பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறை அலுவலகத்தை அடித்துத் துவம்சம் செய்தார்கள். அங்கிருந்த பேராசிரியர்களும் தாக்கப்பட்டார்கள். ஏ.கே.ராமானுஜன் எழுதிய கட்டுரை, மதரீதியான உணர்வுகளைப் புண் படுத்துவதாகவும் அதனைப் பாடத்திட்டத்திலிலிருந்து நீக்கவேண்டும் என்பதும்தான் அவர்களின் ரகளை களுக்குக் காரணம். உணர்வைப் புண்படுத்துகிறது என்று சொல்லிலி, உடலையும் உடைமைகளையும் புண்படுத்திவிட்டுப் போனார்கள் வன்முறையில் ஈடு பட்டவர்கள். அதனைத் தொடர்ந்து, பலவித நெருக்கடிகள் கொடுக்கப்பட்டன.
இதன்பின், உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி டெல்லிலி பல்கலைக்கழக நிர்வாகம் நான்கு பேர் கொண்ட குழுவை அமைத்து, இக்கட்டுரையைப் பாடத்திட்டத்தில் நீடிக்கச்செய்வதா வேண்டாமா எனப் பரிசீலிலித்தது. நால்வரில் மூவர், இக்கட்டுரையில் எவ்வித ஆட்சேபனைக்குரிய கருத்துகளும் இல்லை என்று தெரிவித்தனர். மற்றொருவரும் ஆட்சேபனை தெரிவிக்க வில்லை. படிப்பதற்கு சிரமமாக இருக்கும் என்று மட்டுமே தெரிவித்திருந்தார். ஆனால், பெரும்பான்மை முடிவையோ, ஆய்வாளர்களின் நோக்கத்தையோ கவனத்தில் எடுக்காமல் ஏ.கே.ராமானுஜன் எழுதிய கட்டுரையைப் பாடத்திட்டத்திலிலிருந்து நீக்குவது என டெல்லிலிப் பல்கலைக்கழக நிர்வாகம் முடிவெடுத்துவிட்டது.
பலவித ராமாயணங்கள் நாட்டில் நிலவுகின்றன என்பதை ஆதாரப்பூர்வமாக எடுத்துக்காட்டுகிற ஒரு கட்டுரை எப்படி, உணர்வுகளைப் புண்படுத்துவதாக இருக்கும் என்பதற்குப் பல்கலைக்கழக நிர்வாகம் எவ்வித விளக்கத்தையும் அளிக்கவில்லை. அரசியல் காரணங் களும் அது தொடர்பான நிர்பந்தங்களுமே, இக்கட்டுரையை நீக்கியதற்குக் காரணம் என்கிறார்கள் வரலாற்று அறிஞர் களும் ஆய்வாளர்களும்.
மத அமைப்பினரின் எதிர்ப்புகளை பலமுறை எதிர் கொண்டவர் இந்தியாவின் சிறந்த வரலாற்று ஆய்வாளரான ரோமிலா தாப்பர் என்ற பெண்மணி அவர், ""ஏ.கே.ராமானுஜனின் 300 இராமாயணங்கள் என்ற கட்டுரை மிகச்சிறந்த எழுத்தாக்கம்'' என்று சொல்வதுடன், ""ராமாயணம் என்றால் வால்மீகி ராமா யணத்தை மட்டுமே அங்கீகரிக்க வேண்டும் என்றும் மற்ற இராமாயணங்களைக் குறிப்பிடுவதையே தவிர்க்க வேண்டும் என்பதுபோல மத அமைப்பினர் செயல்படு கின்றனர்'' என்கிறார். மேலும், ""வால்மீகி தன்னுடைய ராமாயணத்தை எழுதுவதற்குப் பல நூற்றாண்டுகள் முன்பே இங்கே ராமனின் கதை வாய்மொழியாக இருந்து வந்ததற்கான ஆதாரங்கள் இருக்கின்றன'' என்கிறார்.
ஒவ்வொரு ராமாயணத்திலும் கதையின் சாராம்சம் ஏறத்தாழ ஒன்றாக இருந்தாலும், கதையின் போக்கு என்பது மாறுபட்டிருக்கிறது. அது அந்த ராமாயணம் எங்கு எழுதப் பட்டதோ அந்த மண்ணில் நிலவும் தன்மைகளின் அடிப்படையிலும், எந்த மொழியில் எழுதப்பட்டதோ அந்த மொழியின் சிறப்பியல்புகளின் அடிப்படையிலும் அமைந்துள்ளது. இந்து மத பாரம்பரியத்தின் அடிப்படையில் வால்மீகியும், தமிழ்ப் பண்பாட்டின் அடிப்படையில் கம்பனும், ஜைன மதத்தின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ள பவுமாச் சரியமும், தலித்தியப் பார்வையில் கன்னட மொழியிலான நாட்டுப்புற ராமாயண கதையும் வடிக்கப்பட்டுள்ளன.
வெவ்வேறு ராமாயணங்களில் வெவ்வேறு வகையிலான காட்சி யமைப்புகள் உள்ளன. உதாரணத்திற்கு, வால்மீகி ராமாயணத்தில் சீதையை ராவணன் தூக்கிச்செல்வதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. கம்பராமாயணத்தில் சீதையை ராவணன் தொடவில்லை. ஏனெனில், பிறர் மனைவியைத் தொடுவது என்பது தமிழ்ப்பண்பாட்டிற்கு எதிரானது. அதனால், சீதை நின்ற இடத்தையும் சேர்த்து அப்படியே மண்ணோடு பெயர்த்து, சீதையை தன் பறக்கும் பூப் பல்லக்கில் கொண்டு செல்கிறான் ராவணன். அதுபோல அகலிலிகை கதாபாத்திரம் பற்றிய செய்திகளிலும் இரண்டு ராமாயணங்களுக்கும் வேறுபாடு உண்டு.
ஜைன ராமாயணத்தில் ராவணனை அரக்கனாகச் சித்தரிக்கவில்லை. 63 ஜைன நாயகர்களில் ஒருவராக சித்தரிக்கப்படுகிறார். இந்திய ராமாயணம் பர்மா, இந்தோனேஷியா, தாய்லாந்து, கம்போடியா எனப் பல இடங்களுக்கும் பரவியுள்ளது. தாய்லாந்து ராமாயணத்தில் விஷ்ணுவின் அவதாரமாக ராமன் சித்தரிக்கப்படவில்லை. சிவனுடன் தொடர்புடையவராகக் காட்டப்படுகிறார். சீதையை ராவணன் கடத்தியதாகவும் தாய்லாந்து ராமாயணம் வர்ணிக்கவில்லை. சீதை மீது ராவணன் கொண்ட காதலால் தன்னுடைய நாடு, நகரம், குடும்பம், உயிர் எல்லாவற்றையும் தியாகம் செய்திருக்கிறான் என்றே குறிப்பிடப்படுகிறது. ராவணன் கொல்லப்படும் காட்சி வால்மீகி ராமாயணத்தில் கொண்டாட்டத்திற்குரியதாகவும் தாய்லாந்து ராமாயணத்தில் சோகத்திற்குரியதாகவும் அமைந்துள்ளது.
இந்திய ராமாயணத்தில் அனுமன், கட்டை பிரம்மச்சாரி. பெண்களை ஏறெடுத்தும் பார்க் காதவர். ஆனால், தாய்லாந்து ராமாயணத்தில் அனுமனின் செய்கைகள் வேறுவிதமாக இருக்கின்றன. இலங்கையில் சீதை எங்கே இருக்கிறார் என்று கண்டு பிடிப்பதற்காக ஒவ்வொரு பெண்ணையும் ரகசியமாக கவனிக்கிறார் அனுமன். ஒவ்வொரு வீட்டின் ஜன்னல் வழியாக, அந்த வீட்டின் படுக்கையறையை எட்டிப் பார்க்கிறார். அங்கே யார் வீட்டுப் படுக்கையிலாவது சீதை இருக்கிறாரா என்பதுதான் அனுமனின் தேடலாக இருக்கிறது.
வனவாசத்தின்போது, ராமனுடன் சீதையும் உடனே காட்டுக்குச் சென்றதைக் குறிப்பிட்டு, ராமன் இருக்கும் இடமே சீதைக்கு அயோத்தி என்று பெருமையோடு சொல்வது வழக்கம். ஆனால், அத்யாத்மா ராமாயணம் என்ற காப்பியத்தில், ராமனுடன் காட்டுக்குச் செல்ல சீதை மறுக்கிறார். கடும் வாக்குவாதம் செய்கிறார். கடைசியாக, சீதை காட்டுக்குச் செல்கிறார். ஜைன ராமாயணத்தில் ராமனும் சீதையும் "சகோதர-சகோதரி' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இப்படிப் பல்வேறு ராமாயணங்கள் இருப்பதை எடுத்துக்காட்டும் ஏ.கே.ராமானுஜனின் கட்டுரையால் மத உணர்வுகள் குறிப்பாக, இந்த மத உணர்வுகள் புண்படுத்தப்படுவதாகவும் ராமனையும் சீதையையும் பற்றித் தவறான சித்திரங்கள் வெளிப்படுவதாகவும் அரசியல் பின்னணி கொண்ட மத இயக்கங்கள் எழுப்பிய கூக்குரலே, அந்தக் கட்டுரையை நீக்கச் செய்திருக்கிறது. அதே ராமாயணத்தில் சம்புகன் என்ற சூத்திரன் தவம் செய்தான் என்பதற்காக அவனை ராமனே கொன்றதாக வால்மீகி குறிப்பிபட்டிருப்பதைச் சுட்டிக்காட்டி சூத்திரர் களும் தலிலித் உள்ளிட்ட மற்ற ஒடுக்கப்பட்ட மக்களும், இது எங்களை இழிவுபடுத்துகிறது என்று எதிர்ப்புத் தெரிவித்தால் வால்மீகி ராமாயணத்தையும் பல்கலைக் கழகம் தன் பாடத்திட்டத்திலிலிருந்து நீக்கிவிடுமா எனக் கேட்கிறார்கள் வரலாற்று அறிஞர்கள். ""இந்த மத வெறியர்களை இந்தோனேஷியாவிலும் தாய்லாந்திலும் போய் போராடச் சொல்லுங்கள்'' என்கிறார் ரோமிலா தாப்பர் மிகவும் கோபமாக.
இராமாயணம் குறித்த பார்வை பலவித ஆய்வுகளுக்கு வழிவகுத்து வந்துள்ளது. இது ஆரிய-திராவிட யுத்தம் என்று பண்டித ஜவகர்லால் நேரு, தனது டிஸ்கவரி ஆஃப் இந்தியா புத்தகத்தில் பதிவு செய்துள்ளார். திராவிட இனத்தின் பெருமையைக் குலைப்பதற்காக எழுதப்பட்டதே வால்மீகி ராமாயணமும் அதனைத் தழுவிய கம்ப ராமாயணமும் என்று சொல்லிலி, அவற்றைத் தீயிலிடச் செய்தார் பெரியார் ஈ.வே.ரா. இராவணனை "இரக்கம் எனும் ஒரு பொருளில்லா அரக்கன்' எனக் கம்பன் வர்ணித்திருப்பதைக் கண்டித்து, அதற்காக அவர் மீது வழக்குத் தொடுப்பது போலவும் அந்த வழக்கு நடை பெறும் நீதிமன்றத்தின் குற்றவாளிக் கூண்டில் கம்பர், வால்மீகி, ராமன், விஸ்வாமித்ரர் ஆகியோர் ஏறி வழக்கை எதிர்கொள்வதுபோலவும் நீதிதேவன் மயக்கம் என்ற நாடகத்தை எழுதினார் அறிஞர் அண்ணா.
ராவணன் மன்னனா, அரக்கனா என்பது பற்றிய வாதங்களும் தொடர்ந்தபடியே இருக்கின்றன. தசரா கொண்டாட்டத்தின் இறுதியில் ராமலீலா என்ற பெயரில் ராவணன், கும்பகர்ணன் ஆகியோரின் உருவத்தை தீயிலிடும் வழக்கம் வடமாநிலங்களில் நடைபெறுகிறது. அதே வட மாநிலத்திற்குட்பட்ட மத்தியபிரதேசத்தின் மண்ட்சவுர் என்ற ஊரில் ராவணனை தங்கள் ஊர் மருமகன் என்று சொல்லிலி, அதே தசராவின்போது ராவணனை வழிபடுகிறார்கள். ராவணன் மனைவி மண்டோதரி பிறந்த ஊர் என்பதால்தான் இது மண்ட்சவுர் என்றும் அவர்கள் சொல்கிறார்கள்.
இராமாயணம் பற்றிய நம்பிக்கைகளும் பழக்க வழக்கங்களும் பலவிதமாக உள்ளன. வரலாற்று ஆய்வு களையும் அது வெளிப்படுத்தும் உண்மைகளையும் ஏற்றுக்கொள்ளும் பெருந்தன்மையும் சகிப்புத்தன்மையும் குறைவாகவே இருக்கிறது. மத நம்பிக்கைகளின் அடிப் படையில் இராமாயண காலம் என ஒன்றைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு, இராமர் குறிப்பிட்ட இடத்தில்தான் அவதரித்தார் என்று சொல்லிலிக்கொண்டு அதனை அரசியல் கண்ணோட்டத்துடன் அணுகுவதால் மதக் கலவர அபாயங்கள் அதிகரிக்கின்றன. வரலாற்றுச் சின்னங்களும் எதிர்கால நலனுக்கானத் திட்டங்களும் சிதைகின்றன. முடக்கப்படுகின்றன. பாபர் மசூதி இடிப்பும், சேது சமுத்திரத் திட்டம் நிறைவேறுவதை ராமர் பாலம் என்பதை முன்வைத்து தடுத்ததும் இதற்கான உதாரணங்கள்.
சகிப்புத்தன்மை குறைந்திருப்பதும் வன்முறை பெருகுவதும் ஒரு மதத்திற்கு மட்டுமே உரியதென்று சொல்லிவிலிட முடியாது. பரவலாக இருக்கிறது. கேரளாவில் இடுக்கி மாவட்டம் தொடுபுழாவில் உள்ள நியூமேன் கல்லூரியில் மலையாளத்துறை பேராசிரியரான டி.ஜே. ஜோசப், தேர்வுக்காக ஒரு கேள்வித்தாளைத் தயாரித் திருந்தார். அதில், இஸ்லாமியர்களின் இறைத்தூதர் முகமது நபி பற்றிக் குறிப்பிட்டு கேள்விகள் கேட்டிருந்தார் என்பதற்காக மதவாதிகள் அவரை வழிமறித்து வெட்டி, வலது உள்ளங்கையைத் துண்டாக்கி வீசி எறிந்தனர். அவருடைய இடதுகாலும் முடமாகும் அளவில் வெட்டினர். இந்தக் கேள்வித்தாளுக்கு எதிராக மத அமைப்புகள் பல போராட்டங்களையும் நடத்தின. தாக்குதலுக்குள்ளான பேராசிரியர் ஜோசப்பை பல்லைகக்கழகமும் பணியிலிலிருந்து நீக்கியது. அவர் பணியாற்றியது கிறிஸ்தவ கல்லூரி என்பதால் அவர் மீதான நடவடிக்கை குறித்து தேவாலயங்களில் பகிரங்கமாகப் படிக்கப்பட்டது. பேராசிரியர் செய்த செயல், கல்வித்துறை சார்ந்தது. அந்தளவில் அதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டிருக்கவேண்டும். ஆனால், அதைத்தாண்டி மதரீதியான நடவடிக்கைகளும் வன்முறைத் தாக்குதல் களும் நடைபெற்றன.
வெட்டி வீசப்பட்ட பேராசிரியரின் உள்ளங்கையை சிலர் உடனடியாக தேடி எடுத்துவிட்டதால் அவரை மருத்துவமனையில் சேர்த்து, அறுவை சிகிச்சை மூலம் கையை ஒட்டவைத்து, சிதைக்கப்பட்ட காலையும் சரி செய்தனர். இதற்கு ஏராளமான ரத்தம் தேவைப்பட்டபோது, அப்பகுதியில் இருந்த முஸ்லீலிம் மக்கள்தான் கிறிஸ்தவரான பேராசிரியர் ஜோசப்புக்குப் பெருமளவில் ரத்ததானம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய மனிதநேயம் இருப்பவர்களிடம் சகிப்புத்தன்மை நிச்சயம் இருக்கும். உண்மைகளை அடையாளம் காண்கிற தெளிவு இருக்கும்.
வெறும் நம்பிக்கைகளின் அடிப்படையில் இராமாயணங்கள் பற்றிய கட்டுரையை எதிர்ப்பது, மசூதி களை இடிப்பது, திட்டங்களைத் தடுப்பது, வன்முறைத் தாக்குதல் நடத்துவது என்பது கொடூர செயல்களாகும்.
மத உணர்வாளர்களுக்கு சகிப்புத்தன்மை இல்லை யென்றால், "படிப்பது ராமாயணம் இடிப்பது பெருமாள் கோவில்' என்று கிராமப்புறத்தில் சொல்வது உண்மையாகி விடும்