சாமை கொழுக்கட்டை & தினை சந்தவை !!
அரிசி என்றதும் நமக்கு நெல்லரிசி மட்டுமே நினைவுக்கு வருகிறது. எந்தத் தானியங்களிலும் தோலை நீக்கினால், அது அரிசிதான். வரகின் தோலை நீக்கினால், வரகரிசி; சாமையின் தோலை நீக்கினால், சாமையரிசி. நெல்லரிசியாக இருந்தாலும் சரி, சிறுதானிய அரிசியாக இருந்தாலும் சரி, வெள்ளையாக, பளபளப்பாக இருந்தால்தான் அதை வாங்குவதில் நாம் ஆர்வம் கட்டுகிறோம். இவ்வாறு பட்டை தீட்டப்பட்டு, பாலிஷ் செய்யப்பட்ட அரிசி வகைகளைப் பயன்படுத்துவதால், நமக்குத் தேவையான ஙி12 விட்டமின் கிடைப்பது இல்லை. இந்த விட்டமின் பற்றாக்குறை ஞாபகமறதியை அதிகப்படுத்தும்; மூளையை மழுங்கடிக்கும். இதைத் தடுக்க, பட்டை தீட்டப்படாத அரிசிகளைப் பயன்படுத்துவது நல்லது!