Author Topic: ~ 30 வகை வற்றல் - வடாம் - ஊறுகாய் ~  (Read 2610 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226323
  • Total likes: 28791
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
30 வகை வற்றல் - வடாம் - ஊறுகாய்





வெயில் காலம் துவங்கிவிட்டாலே, மொட்டை மாடியை குத்தகைக்கு எடுத்துக்கொண்டு... வற்றல், வடாம், ஊறுகாய் வகைகளை தயாரிக்கத் துவங்கிவிடுவார்கள் இல்லத்தரசிகள் பலர். பொரியல் செய்யாத சமயத்தில் அவசரத்துக்குக் கைகொடுப்பதுடன், வீட்டில் உள்ளவர்களை 'இன்னும் கொஞ்சம்... இன்னும் கொஞ்சம்’ என்று கேட்டு சாப்பிட வைக்கும் அளவுக்கு சுவையில் அசத்தும் 30 வகை வற்றல், வடாம், ஊறுகாய் வகைகளை தயாரித்து வழங்கி, உங்களுக்கு ஆருயிர்த் தோழியாய் உதவிக்கரம் நீட்டுகிறார், சமையல்கலை நிபுணர் சுதா செல்வக்குமார்.
சம்மர்ல தயார் பண்ணுங்க... வருஷம் முழுக்க டேஸ்ட் பண்ணுங்க!

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226323
  • Total likes: 28791
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
கொத்தவரங்காய் வற்றல்



தேவையானவை:
கொத்தவரங்காய் - அரை கிலோ, மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
நல்ல கொத்த வரங்காய்களாக தேர்வு செய்து... அடி, நுனி நீக்கிவிட்டு அலசி, அது மூழ்கும் அளவுக்குத் தண்ணீர் விட்டு, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்துக் கொதிக்கவிடவும்.
கொத்தவரங்காய் நன்கு வெந்ததும் இறக்கி, நீரை நன்றாக வடித்துவிட்டு, வெயிலில் காயவிடவும். இது நன்கு காய வேண்டும் (அதாவது உடைக்கும் பதம் வரும் வரை). பிறகு, எடுத்து பத்திரப்படுத்தவும்.

இதை எண்ணெயில் பொரித்து ரசம் சாதம், மோர் சாதத்துக்கு தொட்டுக் கொள்ளலாம். குழம்பிலும் சேர்க்கலாம்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226323
  • Total likes: 28791
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
சுண்டைக்காய் வற்றல்



தேவையானவை:
பச்சை சுண்டைக்காய் - அரை கிலோ, மோர் - ஒரு லிட்டர், காய்ந்த மிளகாய் - 3, உப்பு - ஒரு டேபிள்ஸ்பூன்.

செய்முறை:
பச்சை சுண்டைக்காயை அலசி கத்தியால் லேசாக கீறிக்கொண்டு, கொதிக்கும் நீரில் போட்டு 5 நிமிடம் மூடி போட்டு வைத்து பிறகு நீரை வடிக்கவும். மோரில் உப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து, சுண்டைக்காயை போட்டு ஊறவிடவும். அடுத்த நாள் மோரிலிருந்து காயை கரண்டியால் அரித்தெடுத்து வெயிலில் காயவிடவும். மோரை கீழே ஊற்றி விடக்கூடாது. தனியே எடுத்து வைக்கவும். மாலையில் திரும்பவும் காயை மோருக்குள் போட்டு கலக்கி மூடிவைக்கவும். மோர் வற்றும் வரை திரும்பத் திரும்ப இதே மாதிரி 3 நாட்கள் செய்ய வேண்டும். வற்றல் நன்கு காயும் வரை வெயிலில் வைத்து, எடுத்து பத்திரப்படுத்தவும். வற்றல் குழம்பு செய்ய இதை வதக்கி பயன்படுத்தலாம். இந்த வற்றலை வறுத்து மிக்ஸியில் பொடித்து, சூடான சாதத்தில் சேர்த்து, எண்ணெய் விட்டு பிசைந்தும் சாப்பிடலாம்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226323
  • Total likes: 28791
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
மோர் மிளகாய்



தேவையானவை:
பச்சை மிளகாய் - 100 கிராம், கெட்டித் தயிர் - ஒரு கப், உப்பு - 2 டீஸ்பூன்.

செய்முறை:
பச்சை மிளகாயைக் கழுவி, துடைத்து, நுனியில் சற்று கீறிவிடவும். காம்பு மிகப் பெரிதாக இருந்தால், சிறிய அளவு மட்டும் விட்டு விட்டு, மீதியை நீக்கிவிடவும். பெரிய கண்ணாடி பாத்திரம் / ஜாடியில் மிளகாயை சேர்க்கவும். தயிருடன் உப்பு சேர்த்துக் கடைந்து மிளகாய் மூழ்கும் அளவு ஊற்றி வைக்கவும்.

3 நாட்கள் ஊறிய பிறகு, தயிரிலிருந்து மிளகாயை சற்றே பிழிந்தாற்போல் எடுத்து, ட்ரே (அ) தட்டு (அ) பெரிய பாலித்தீன் கவரில் பரப்பி, நல்ல வெயிலில் காய வைக்கவும். தயிர் கலவையும் வெயிலேயே வைக்கலாம். மாலை ஆனவுடன் மிளகாயை திரும்பவும் தயிருடன் கலந்துவிடவும். ஒரு நாள் விட்டு ஒரு நாள் மிளகாயை இப்படி காய வைக்கவும். வெயிலில் வைக்க வைக்க... மிளகாயும், தயிரும் காய்ந்துவிடும். பிறகு, காற்று புகாத டப்பாவில் சேமித்து வைத்து உபயோகப்படுத்தவும் (எண்ணெயில் நன்றாக வறுக்க வேண்டும்).
 இது மோர் சாதத்துக்கு சரியான ஜோடி. மோர்க்களி செய்யும்போதும் பயன்படுத்தலாம்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226323
  • Total likes: 28791
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
வெண்டைக்காய் வற்றல்



தேவையானவை:
வெண்டைக்காய் - ஒரு கிலோ, தயிர் - ஒரு கப், உப்பு - தேவைகேற்ப.

செய்முறை:
பிஞ்சு வெண்டைக்காய்களாக பார்த்து வாங்கி, ஒரு அங்குலத் துண்டுகளாக வெட்டி வெயிலில் காயவைக்கவும். மாலையில் தயிரில் உப்பு சேர்த்து, இந்த வெண்டைக்காய்களையும் போட்டுக் கலந்து 3, 4 நாட்கள் ஊறவைக்கவும். பின்னர் வெயிலில் காயவிட்டு எடுத்து வைக்கவும்.
இதைப் பொரித்து சாப்பிடலாம், குழம்பு செய்யவும் பயன்படுத்தலாம்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226323
  • Total likes: 28791
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
கத்திரிக்காய் வற்றல்



தேவையானவை:
கத்திரிக்காய் - கால் கிலோ, புளித் தண்ணீர் - சிறிதளவு, மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
 கத்திரிக்காயை சிறு துண்டுகளாக நறுக்கி, ஒரு நாள் வெயிலில் காயவைத்து எடுத்துக்கொள்ளவும். இதனுடன் புளித் தண்ணீர் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து அடுப்பில் வைத்து  கொஞ்ச நேரம் கொதிக்கவிடவும். வெந்ததும் நீரை வடித்து, திரும்பவும் 2 நாட்கள் வெயிலில் காயவைத்து உபயோகப்படுத்தவும்.
இதை வதக்கி பயன்படுத்தி குழம்பு செய்தால்... ருசியாக இருப்பதுடன், வாசனை ஊரைக் கூட்டும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226323
  • Total likes: 28791
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
தும்மட்டிக்காய் வற்றல்



தேவையானவை:
தும்மட்டிக்காய் - ஒரு கப் (கோவைக்காயை விட சிறிய அளவில் இருக்கும்), புளித்த தயிர் - ஒரு கப், காய்ந்த மிளகாய் - 5, வெந்தயம் - அரை டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
தும்மட்டிக்காயை சிறு துண்டுகளாக நறுக்கி, வெயிலில் காய வைக்கவும். வெந்தயத்தை தயிரில் 6 - 7 மணி நேரம் ஊறவைத்து... இதனுடன் உப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து அரைத்து, தும்மட்டிக்காயும் சேர்த்துக் கலக்கவும். பிறகு, இதை வெயிலில் நன்கு காய வைத்து எடுக்கவும்.
இந்த வற்றலை எண்ணெயில் பொரித்து சாப்பிட்டால், சூப்பர் சுவையில் இருக்கும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226323
  • Total likes: 28791
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
மணத்தக்காளி வற்றல்



தேவையானவை:
மணத்தக்காளி காய் - கால் கிலோ, தண்ணீர் - அரை லிட்டர், உப்பு - 2 டீஸ்பூன்.

செய்முறை:
தண்ணீரை நன்கு கொதிக்கவைத்து, அடுப்பிலிருந்து இறக்கி... உப்பு, மணத்தக்காளி சேர்த்து மூடி வைக்கவும். 10-15 நிமிடங்களுக்குப் பிறகு, நீரை நன்றாக வடிகட்டவும். மணத்தக்காளி காயை, ஒரு வாரம் வரை வெயிலில் காயவிடவும். ஈரமில்லாமல் நன்கு காய்ந்தவுடன், காற்றுப்புகாத டப்பாவில் அடைத்து, தேவைப்படும்போது உபயோகப்படுத்தவும்.

மணத்தக்காளி வற்றலை வதக்கிப் பயன்படுத்தி குழம்பு வைத்தால், சுவையும், மணமும் அள்ளும். இதை நெய்யில் வதக்கி, மிக்ஸியில் பொடி செய்து சூடான சாதத்தில் சேர்த்து, எண்ணெய் சிறிது விட்டு பிசைந்து சாப்பிடலாம். இந்த வற்றலை வாரம் ஓரிரு முறை சேர்த்துக்கொண்டால், வயிற்றுக்கு நல்லது. இது, கர்ப்பப்பையில் புண் வரா மல் தடுக்கும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226323
  • Total likes: 28791
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
மைதா - ஜவ்வரிசி வடாம்



தேவையானவை:
ஜவ்வரிசி - ஒரு கப், மைதா - கால் கப், பச்சை மிளகாய் - 4, மஞ்சள்தூள், சீரகம் - தலா ஒரு டேபிள்ஸ்பூன், எலுமிச்சை பழம் - ஒன்று, பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:
ஜவ்வரிசியை இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும். குக்கரில் ஒரு கப் நீர் விட்டு, ஜவ்வரிசியை சேர்த்து குழைய வேகவிடவும். அடுத்த நாள், மைதாவை நீரில் கரைத்து இதனுடன் கலந்துகொள்ளவும். பிறகு, பச்சை மிளகாய், உப்பு, பெருங் காயத்தூள் ஆகியவற்றை அரைத்து சேர்க்கவும்.

அடிகனமான பாத்திரத்தில் சிறிதளவு நீரைக் கொதிக்கவிட்டு, இந்தக் கலவையை சேர்த்துக் கிளறி... மஞ்சள்தூள், சீரகம், எலுமிச்சைச் சாறு சேர்த்து அடுப்பை நிறுத்தவும். பிறகு, கரண்டியால் மாவை எடுத்து, பிளாஸ்டிக் பேப்பரில் வட்டமாக அப்பள வடிவில் இழுக்கவும். மறுநாள், அடுத்த பக்கம் திருப்பி போட்டு,  காய்ந்ததும் எடுத்து வைத்து, தேவைப்படும் போது, எண்ணெயில் பொரித்து சாப்பிடவும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226323
  • Total likes: 28791
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
ஜவ்வரிசி வடாம்



தேவையானவை:
 ஜவ்வரிசி - 3 கப், புளித்த மோர் - ஒன்றரை கப், காய்ந்த மிளகாய் - 15 (விழுதாக அரைத்துக்கொள்ளவும்), இஞ்சிச் சாறு - கால் கப், நெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
ஜவ்வரிசியை நன்கு அலசி, 2 மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும். பிறகு, நீரை வடித்து மிளகாய் விழுது, உப்பு, இஞ்சி சாற்றை ஊறிய ஜவ்வரிசியுடன் சேர்த்து நன்கு கிளறவும். பெரிய அடிகனமான பாத்திரத்தில் 4 - 5 கப் நீர் சேர்த்து கொதிக்கவிடவும். அதில் ஜவ்வரிசி கலவையை சேர்த்து கைவிடாமல் கிளறவும்.
 
ஜவ்வரிசி நன்கு வெந்த பதம் வந்ததும், அடுப்பிலிருந்து இறக்கி, புளித்த மோர், நெய் சேர்த்துக் கிளறிவிடவும்.
நல்ல வெயிலில் சுத்தமான துணி அல்லது பெரிய பாலித்தீன்  கவரை பரப்பி, சிறு கரண்டியால் மாவினை எடுத்து சின்ன, சின்ன வட்டங்களாக ஊற்றி வைக்கவும். 3-4 நாட்கள் காயவைத்து எடுத்து, ஈரமில்லாத டப்பாவில் போட்டு வைத்து, தேவைப்படும்போது பொரித்து சாப்பிடலாம்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226323
  • Total likes: 28791
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
தக்காளி வடாம்



தேவையானவை:
 தக்காளி - 5, ஜவ்வரிசி - ஒரு கப், இஞ்சிச் சாறு - 2 டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் விழுது - ஒரு டேபிள்ஸ்பூன், எலுமிச்சை பழம் - ஒன்று, உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:
தக்காளியை மிக்ஸியில் கூழாக அரைத்துக்கொள்ளவும். ஜவ்வரிசியை 7 மணி நேரம் ஊறவைக்கவும். அடிகனமான பாத்திரத்தில் தண்ணீரைக் கொதிக்கவைத்து,  ஜவ்வரிசியை சேர்த்து வேகவிடவும். வெந்ததும் தக்காளிக் கூழ், இஞ்சிச் சாறு, உப்பு, பச்சை மிளகாய் விழுது சேர்த்துக் கிளறவும். பிறகு, அடுப்பை அணைத்து இறக்கி வைத்து, எலுமிச்சை பழத்தைப் பிழிந்து கலக்கவும். இந்தக் கலவையை ஸ்பூனால் சிறிது சிறிதாக எடுத்து, பிளாஸ்டிக் ஷீட் (அ) சுத்தமான துணியில் ஊற்றிப் பரப்பி காயவிடவும். 3-4 நாட்கள் காயவேண்டும்.
கலர்ஃபுல்லான இந்த வடாமை தேவைப்படும்போது சூடான எண்ணெயில் பொரித்து சாப்பிடவும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226323
  • Total likes: 28791
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
அவல் வடாம்



தேவையானவை:
அவல் - கால் கிலோ, பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் - 100 கிராம், பச்சை மிளகாய் - 5 (விழுதாக அரைக்கவும்), ஓமம் - ஒரு டீஸ்பூன், துருவிய வெள்ளைப் பூசணி - அரை கப், உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:
அவலை நன்றாக மண் போக அலசி, சுடுநீரில் 15 நிமிடங்கள் ஊறவைக்கவும். பிறகு, நீரை வடித்து, அதனுடன் துருவிய பூசணி, பச்சை மிளகாய் விழுது, ஓமம், உப்பு சேர்த்து மையாக அரைக்கவும். நறுக்கிய வெங்காயத்தை இதில் போட்டுப் பிசையவும். இந்த மாவை கையால் எடுத்து, பிளாஸ்டிக் ஷீட்டில் பக்கோடா மாதிரி கிள்ளிக் கிள்ளி வைத்து, வெயிலில் 2 நாட்கள் காயவிட்டு எடுத்து வைக்கவும்.
இதை சூடான எண்ணெயில் பொரித்து சாப்பிடலாம். ஒரு மாதம் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226323
  • Total likes: 28791
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
புதினா வடாம்



தேவையானவை:
இட்லி அரிசி - ஒரு கப், ஜவ்வரிசி - கால் கப், பச்சை மிளகாய் - 4, புதினா (ஆய்ந்தது) - அரை கப், பெருங்காயத்தூள் - ஒரு டீஸ்பூன், கல் உப்பு - 2 டீஸ்பூன்.

செய்முறை:
அரிசியை 3 மணி நேரம் ஊறவைத்து, களைந்து, மையாக அரைக்கவும். 2 மணி நேரம் ஜவ்வரிசியை ஊறவைக்கவும். புதினா, பச்சை மிளகாய், உப்பு, பெருங்காயத்தூள் ஆகியவற்றை சேர்த்து மையாக அரைத்துக்கொள்ளவும். அடிகனமான பாத்திரத்தில் தண்ணீர் (7-8 டம்ளர்) ஊற்றி கொதிக்கவிடவும். அதில் ஜவ்வரிசியைப் போட்டு வேகவிடவும். அரைத்து வைத்த அரிசி மாவு, புதினா விழுது ஆகியவற்றை இதனுடன் சேர்த்துக் கிளறவும் (கட்டித்தட்டாதவாறு, அடிபிடிக்காதபடி, கைவிடாமல் கிளறவும்). நன்றாக வெந்ததும்  இறக்கவும்.
மாவை பிளாஸ்டிக் ஷீட்டில் கரண்டியால் வட்டமாக ஊற்றி, வெயிலில் காயவிட்டு, மாலை அதை உரித்து திருப்பி போட்டு, காயவிடவும். 2-3 நாட்கள் வெயிலில் காயவிட்டு எடுத்து, காற்றுப்புகாத டப்பாவில் அடைத்து வைக்கவும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226323
  • Total likes: 28791
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
சிவப்பரிசி வடாம்



தேவையானவை:
சிவப்பு புழுங்கல் அரிசி - ஒரு கப், ஜவ்வரிசி - அரை கப், பச்சை மிளகாய் - 2, பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, சீரகம் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
சிவப்பு புழுங்கல் அரிசியைக் களைந்து 7 மணி நேரம் ஊறவைக்கவும். ஜவ்வரிசியையும் தனியாக 2 மணி நேரம் ஊறவைக்கவும். ஊறவைத்த அரிசியை கிரைண்டரில் போட்டு அரைக்கவும். பாதி அரைபட்ட தும், சீரகம், ஊறவைத்த ஜவ்வரிசி, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து அரைக்கவும்.

அடிகனமான பாத்திரத்தில் நீர் விட்டு, கொதிக்க ஆரம்பித்ததும் அரைத்த மாவை சிறிது, சிறிதாக ஊற்றி கைவிடாமல் கிளறவும். இத னுடன் பெருங்காயத்தூள் சேர்க்கவும். மாவு மேலே தெறித்து விழாமல் கவனமாக கிண்டி (தீயைக் குறைத்து வைக்கவும்) வெந்ததும் இறக்கவும். முறுக்கு அச்சில் எண்ணெய் தடவி, மாவைப் போட்டு, சுத்தமான துணி (அ) பிளாஸ்டிக் ஷீட்டில் விருப்பமான வடிவத்தில் பிழிந்து, வெயிலில் வைத்து, திருப்பிப் போட்டு 2, 3 நாட்கள் காயவிட்டு எடுக்கவும்.
இதை ஒரு வருடம் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226323
  • Total likes: 28791
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
நீள வடாம்



தேவையானவை:
சாதம் - ஒரு கப், சீரகம் - 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 3, பெருங்காயத்தூள், ஓமம் - தலா ஒரு சிட்டிகை, உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:
கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து, மிக்ஸியில் அரைக்கவும். முறுக்கு அச்சின் உள்ளே எண்ணெய் தடவி இக்கலவையைப் போட்டு, பெரிய பாலித்தீன் கவர் மீது நீள நீளமாக பிழிந்து, 5 நாட்கள் வெயிலில் காயவைத்து எடுக்கவும். தேவைப்படும்போது எண்ணெயில் பொரித்து சாப்பிடலாம்.
இந்த வடாமை 10 நாட்கள் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.