Author Topic: ~ ‘ஒன்ஸ்மோர்’ கேட்கவைக்கும் மோர் இட்லி! ~  (Read 402 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226323
  • Total likes: 28791
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
‘ஒன்ஸ்மோர்’ கேட்கவைக்கும் மோர் இட்லி!



தேவையானவை:
இட்லி மாவு  ஒரு லிட்டர், கெட்டியாக கடைந்த மோர் - 2 லிட்டர்,  மோர் மிளகாய் - 7, சிவப்பு மிளகாய் - 2, வெந்தயம்  ஒரு டீஸ்பூன், கொத்தமல்லித்தழை  ஒரு கைப்பிடி அளவு, எண்ணெய், உப்பு  தேவையான அளவு.

செய்முறை:
இட்லி மாவை மினி இட்லிகளாகவோ, மீடியம் இட்லிகளாகவோ வார்க்கவும். பெரிய இட்லிகளாக இருந்தால் கட் செய்து கொள்ளலாம். மோரில் மூன்றில் இரண்டு பங்கு எடுத்து... தாளித்த வெந்தயம், உப்பு ஆகியவற்றை அதனுடன் சேர்த்து, வறுத்த சிவப்பு மிளகாயை நசுக்கிப் போட்டு, நன்கு கலந்து வைக்கவும். மோர் மிளகாயைத் தனியாக வறுத்து வைத்துக் கொள்ளவும்.
மீதியுள்ள ஒரு பங்கு மோரில் சிறிதளவு நீர் விட்டு கலந்து, சூடான இட்லிகளை அதில் போட்டெடுத்து, பெரிய தாம்பாளத்தில் பரத்தவும். தாளித்து வைத்த கெட்டி மோரில், வறுத்த மோர் மிளகாயை நசுக்கிப் போடவும். இட்லிகள் மீது இந்த மோர் கலவையை விட்டு, கொத்தமல்லித்தழை தூவி, பவுலில் வைத்து, ஸ்பூன் போட்டு சாப்பிடக் கொடுக்கவும்.