Author Topic: ~ மாம்பழத்தின் மருத்துவ குணங்கள்:- ~  (Read 410 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226862
  • Total likes: 29028
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
மாம்பழத்தின் மருத்துவ குணங்கள்:-



* 100 கிராம் மாம்பழச்சதையில் உள்ள சத்துக்கள் வருமாறு. நீர்ச்சத்து 81 கிராம். நார்ச்சத்து 0.70 கிராம். மாவுச்சத்து 16 கிராம். கொழுப்பு 0.40 கிராம், புரதம் 0.60 கிராம், உலோக உப்புகள் 0.40 கிராம், கரோட்டின் 27.43 மைக்ரோ கிராம், வைட்டமின் சி 16 மிலி கிராம், தயாமின் 0.008 மிகி, ரிபோபிளேவின் 0.09 மிகி, நியாசின் 0.09மிகி, கால்சியம் 14 மிகி, பாஸ்பரஸ் 16 மிகி, இரும்பு 1.30 மிகி என்ற அளவில் சத்துக்கள் உள்ளன.

மருத்துவப்பயன்கள்

1) மாம்பழத்தைத் தொடர்ந்து உண்டு வந்தால் தோல் பளபளப்பாகும். தோல் நோய், அரிப்பு போன்றவை மாறும்.

2) தீராத தலைவலியை மாம்பழச்சாறு தீர்க்கும் கோடை மயக்கத்தைத் தீர்க்கும்.

3) மாம்பழத்தில் உள்ள நார்ச்சத்து ஜீரணத்தைக் கூட்டும்.

4) பல்வலி, ஈறுவலி போன்றவற்றை மாம்பழம் குணப்படுத்தும்.

5) மாம்பழம் நோய்த்தடுப்பு சக்தியைக் கூட்டும். இரத்தத்தை ஊற வைக்கும்.

6) மாம்பழச்சாறு நரம்புத்தளர்ச்சியைக் குணப்படுத்தும்.

7) கண்ணில் நீர் வடிதல், மாலைக்கண் போன்றவற்றை மாம்பழம் குணப்படுத்தும்.

8) மாம்பழச்சதையை மிக்சியிலிட்டு சிறிதளவு பால் சேர்த்து, ஏலக்காய், ஐஸ் துண்டுகளைச் சேர்த்து அருந்த சுவையாக இருப்பது மட்டுமின்றி கோடையில் ஏற்படும் வெப்பம், மற்றும் தோல் தொல்லைகளை நீக்கும்.

மாங்காயின் பயன்கள்

* இது அமிலத்தன்மை கொண்டது இதனை ஊறுகாயாகச் செய்து உண்ண வைட்டமின் சி பற்றாக்குறை நீங்கும்.மாங்காயை நறுக்கி வெயிலில் உலர்த்தி மோரில் ஊற வைத்து சாதத்துடன் சேர்த்து உண்ண ஸ்கர்வி எனப்படும் வைட்டமின் குறைபாடால் ஏற்படும் நோய் குணமாகும்.

* காயின் தோலைச்சீவி உலர வைத்து பொடியாக்கி தேன் அல்லது பால் கலந்து அருந்த இரத்த பேதி நிற்கும். வயிற்று உள் உறுப்புகள் பலப்படும்.மாங்காய்ப்பாலை சொறி, சிரங்கு மேல் பூசி வர இவை குணமாகும்.

* மாம்பிஞ்சுகளைத் துண்டுகளாக்கி உப்பு நீரில் ஊற வைத்து உலர வைத்துச் சாப்பிட்டால் பசி ஏற்படும்.குமட்டல் நீங்கும். இலையைச்சுட்டு வெண்ணெயில் குழைத்து தீப்புண். காயங்கள் மீது தடவ இவைகள் விரைவில் ஆறும்.

* மாந்தளிரை மென்று தின்று வர பல் ஈறு உறுதிப்படும்.இலையை தீயிலிட்டு புகையை சுவாசிக்க தொண்டை வலி மாறும்.இதன் துளிர் இலைகளைப் பொடியாக்கி தேனில் குழைத்து உண்ண வயிற்றுப்போக்கு நிற்கும்.மாம்பூக்களை உலர்த்தி பொடியாக்கி தணலில் புகை போட கொசுக்கள் மாறிவிடும்.

* பூக்களை நீரிலிட்டு காய்ச்சி வடிகட்டி வயிற்றுப்போக்கின் போது அடிக்கடி குடித்திட வயிற்றுப்போக்கு நிற்கும்.
மாங்கொட்டை பருப்பைப் பொடியாக்கி வெண்ணெயில் கலந்து தின்ன வயிற்றுவலி குணமாகும்.