« Reply #29 on: November 14, 2014, 01:38:06 PM »
கறுப்பு உளுந்து முளைப்பால்
உளுந்தை எட்டு மணி நேரம் தண்ணீரில் ஊற ஈரத் துணியில் கட்டித் தொங்கவிடுங்கள். 12 மணி நேரத்தில் முளைவிட்டுவிடும். இதை நீர் சேர்த்து அரைத்து பால் எடுக்கலாம்.
மருத்துவப் பலன்கள்: உடல் போஷாக்குடன் இருக்கும். குளிர்ச்சி மிகுந்த உணவு. தாய்ப்பால் அதிகரிக்கும். உடல் மெலிந்தவர்கள் புஷ்டியாகிவிடுவார்கள்.
கொண்டைக்கடலை முளைப்பால்
கொண்டைக்கடலை ஊறி, முளைவிட 24 மணி நேரம் ஆகும். 12 மணி நேரம் ஊறவைத்து ஈரத் துணியில் கட்டி முளைவிட்டதும் அரைத்துப் பால் எடுத்துப் பருகலாம்.
மருத்துவப் பலன்கள்: அதிக புரதச் சத்து நிறைந்தது. வளரும் குழந்தைகள், கடின உழைப்பாளிகள், விளையாட்டு வீரர்கள் சாப்பிட்டுவந்தால், ஆற்றல் அதிகரிக்கும். பச்சைப்பயறு முளைப்பால்
எட்டு மணி நேரம் ஊறவைத்து இரண்டு முறை நன்றாக அலசி, ஈரப் பருத்தித் துணியில் கட்டி எட்டு மணி நேரம் முளைக்கவிடலாம். இதனுடன் நீர் கலந்து மிக்ஸியில் அடிக்கவும். பச்சைப் பயறு பாலாகக் கிடைத்ததும், இதில் தேன், வெல்லம் சேர்த்து காலை உணவாகச் சாப்பிடலாம்.
மருத்துவப் பலன்கள்: வளரும் குழந்தைகள், பெரியவர்களுக்கு மிகவும் நல்லது. சர்க்கரை நோயாளிகள் காய்கறிகளைச் சேர்த்துச் சாப்பிடலாம்.
« Last Edit: November 14, 2014, 01:50:19 PM by MysteRy »

Logged