Author Topic: ~ பழமொழிகள்... ~  (Read 835 times)

Offline MysteRy

~ பழமொழிகள்... ~
« on: August 15, 2014, 08:35:45 PM »
பழமொழிகள்...




* அரசனை நம்பி புருசனை கைவிடாதே

* அரசன் இல்லாத நாடு அச்சில்லாத தேர்.

* அரிசி ஆழாக்கானாலும் அடுப்புக் கட்டி மூன்று வேண்டும்.

* அருமையற்ற வீட்டில் எருமையும் குடியிருக்காது.

* அறக்கப் பறக்க பாடுபட்டாலும் படுக்க பாயில்லை.

* அறச் செட்டு முழு நட்டம் .

* அறப்படித்தவன் அங்காடி போனால், விற்கவும் மாட்டான் கொள்ளவும் மாட்டான்.

* அறமுறுக்கினால் அற்றும் போகும்

* அறிந்தறிந்து செய்கிற பாவத்தை அழுதழுது தொலைக்கவேண்டும்.

* அறிய அறியக் கெடுவார் உண்டா?

* அறிவில்லார் சிநேகம் அதிக உத்தமம்.

* அறிவீன இடத்தில் புத்தி கேளாதே.

* அறிவீனர் தமக்கு ஆயிரம் உரைக்கினும் அவம்.

* அறிவு இல்லார் தமக்கு ஆண்மையுமில்லை.

* அறிவுடையாரை அரசனும் விரும்புவான்.

* அறுபத்து நாலடிக் கம்பத்திலேறி ஆடினாலும், அடியில் இறங்கி தான் தியாகம் வாங்கவேண்டும்

* அறுப்புக் காலத்தில் எலிக்கு ஐந்து பெண்சாதி.

* அற்ப அறிவு அல்லற் கிடம்.

* அளக்கிற நாழி அகவிலை அறியுமா?

* அள்ளிக் கொடுத்தால் சும்மா, அளந்து கொடுத்தால் கடன்.

* அழிந்த கொல்லையில் குதிரை மேய்ந்தாலென்ன, கழுதை மேய்ந்தாலென்ன?

* அழுகிற ஆணையும், சிரிக்கிற பெண்ணையும் நம்பக்கூடாது.

* அழுத பிள்ளை பால் குடிக்கும்

* அழுதாலும் பிள்ளை அவளே பெற வேண்டும்.

* ஆனை கறுத்தால் ஆயிரம் பொன்.