Author Topic: காத்திருப்பது சுகமானது  (Read 598 times)

Offline தமிழன்

காத்திருப்பது சுகமானது
காத்திருந்தால்
காலமும் கனியும் காதலும் கனியும்

காத்திருப்பு உலக நியதி
காத்திருப்பது காலத்தின் கட்டாயம்
இதில்
ஆணும் பெண்ணும் விதிவிலக்கல்ல

இரவு பகலுக்காக
காத்திருக்கிறது
பகல் இரவுக்காக
காத்திருக்கிறது

வாழ்க்கை மரணத்துக்காக
காத்திருக்கிறது
மரணம் வாழ்க்கைக்காக
காத்திருக்கிறது

காத்திருக்கும் விதை
மரமாகிறது
காத்திக்கும் காய்
கனியாகிறது

நாம் எல்லோரும்
யாருக்காகவோ எதற்காகவோ
காத்திருக்கிறோம்
வாழ்க்கை என்பதின் அடிப்படையே
காத்திருத்தல் தான்

இறந்த பிறகும் என்விழிகள்
திறந்தே இருக்கின்றன
உனக்காக கண்மூடாமல்
காத்திருந்த பழக்கம் தான்

Offline Maran

Re: காத்திருப்பது சுகமானது
« Reply #1 on: August 06, 2014, 09:01:12 PM »




"நான் காத்திருந்தால் காதல்
இன்னும் நீளூமில்லையா....!
தண்ணீரில் தீ வளர்த்துக் காத்திருக்கிறேன் - உன்
காலடித் தடத்தில் நான் பூத்திருக்கிறேன்..!"


வைரமுத்துவின் வைர வரிகளை நினைவு படுத்தும் கவி...!
பாராட்டுகள் தமிழன்...






« Last Edit: August 11, 2014, 04:02:21 PM by Maran »