Author Topic: ~ பழங்கால பழமொழிகள் :- ~  (Read 1006 times)

Offline MysteRy

~ பழங்கால பழமொழிகள் :- ~
« on: August 04, 2014, 07:17:55 PM »
பழங்கால பழமொழிகள் :-




மாமியார் உடைத்தால் மண்குடம் மருமகள் உடைத்தால் பொன் குடம்.

மின்னுவதெல்லாம் பொன்னல்ல.

முடக் குதிரைக்குச் சறுக்கினது சாட்டு.

முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்டது போல.

முள்ளை முள்ளால் எடுக்கவேண்டும்.

மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவது போல்.

யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன்.

யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே.
விரலுக்குத் தக்கதே வீக்கம்.

விளையும் பயிரை முளையிலே தெரியும்.

வெண்ணெய் திரண்டுவர தாழி உடைவது போல்.

வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைவானேன்.

வெளுத்ததெல்லாம் பாலல்ல.

பெண்ணின் கோணல் பொன்னிலே நிமிரும்.
பூவிற்றகாசு மணக்குமா?

Offline MysteRy

Re: ~ பழங்கால பழமொழிகள் :- ~
« Reply #1 on: October 09, 2014, 08:06:13 PM »
பழங்கால பழமொழிகள் :-




* நடுக்கடலுக்குப் போனாலும் நாய்க்கு நக்குத் தண்ணீர்தான்.

* நல்ல மாட்டுக்கு ஒரு சூடு நல்ல பெண்டாட்டிக்கு ஒரு வார்த்தை.

* நிழலின் அருமை வெய்யிலில் தெரியும்.

* நிறைகுடம் தளும்பாது.

* பசி வந்தால் பத்தும் பறந்திடும்.

* பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும்.

* பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது.

* பனை மரத்தடியில் பால் குடித்தது போல.

* பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும்.

* பிள்ளையையும் கிள்ளித் தொட்டிலையும் ஆட்டுவது போல்.

* புலி பசித்தாலும் புல்லுத் தின்னாது.

* பூவோடு சேர்ந்த நாரும் மணம் வீசும்.

* பொறுத்தார் அரசாள்வார் பொங்கினார் காடாள்வார்.

* போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து.

* மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.

* மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவது போல்.

* யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன்.

* யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே.

* விரலுக்குத் தக்கதே வீக்கம்.

* விளையும் பயிரை முளையிலே தெரியும்.

* வெண்ணெய் திரண்டுவர தாழி உடைவது போல்.

* வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைவானேன்.

* வெளுத்ததெல்லாம் பாலல்ல.