Author Topic: திருடர்களின் அபாயம் !!!!!  (Read 5593 times)

Offline Global Angel

திருடர்களின் அபாயம் !!!!!
« on: December 06, 2011, 02:26:30 AM »
திருடர்களின் அபாயம் !!!!!

இணையம் வழியாக பல தீராத தொல்லைகளை கொடுத்துவரும் யாரோ சிலர், இரவு நேரங்களில் அதாவது இரவு 11.30 மணிக்கு மேல் எங்கள் வீட்டின் பின் புறமிருக்கும் தாழ்வாரத்தில் ஏறிவந்து அங்கே அவர்கள் வந்துவிட்டு போனதற்கான அடையாளமாக அவர்கள் தின்றுவிட்டு போட்டுவிட்டு போகும் சாக்கலேட்டு காகிதங்களும் இன்னும் பல நொறுவைதீனியின் உரைகளையும் அங்கே பார்க்க முடிகிறது, இத்தகைய பயங்கரம் கடந்த நான்கு ஐந்து மாதமாக தொடர்கதையாகி வருகிறது.

இவர்கள் திருடர்களாகவும், கற்பழிப்பு கொலைகள் ஆட்கடத்தல் செய்பவர்களாகவும் இருக்க வாய்ப்பு இருக்கிறது. ஏன் என்றால், இரவு நேரங்களில் இவர்கள் இரண்டு ஆட்டோக்களில் வருகின்றனர் என்பது அவர்கள் கிளம்பி செல்லும்போது எங்கள் வீட்டின் முன்னால் இருந்தோ அல்லது இரண்டு மூன்று வீடுகள் கடந்து அவர்கள் வந்து செல்லும் ஆட்டோக்கள் கிளம்பிச் செல்லும் சப்தம் கேட்ப்பது வழக்கம். இவர்கள் இணையதளத்தில் தொல்லை கொடுத்துவரும் திருடர்களாக இருக்குமா என்பது சந்தேகமாக உள்ளது.

எங்கள் வீட்டின் எதிரிலும் அருகாமையிலும் பகல் நேரங்களில் ஆட்டோக்கள் நிற்ப்பதுண்டு, புதிய ஆட்டோக்களை அவர்கள் அங்கு நிற்ப்பதற்கு அனுமதிக்க மாட்டார்கள். எனவே அந்த ஆட்டோக்களுடன் இவர்களும் இணைந்து பகல் நேரங்களில் நிற்க முடியாது, பகலில் நிற்கும் ஆட்டோக்கள் அனேகமாக எங்கள் வீட்டைச் சுற்றி இருப்பவர்களின் ஆட்டோக்களாகத்தான் இருக்கும், அவர்கள் இரவு நேர சவாரிக்காக அதே இடத்தில் ஆட்டோக்களை நிற்க வைக்கும் வழக்கம் கிடையாது.

இதனால் இரவில் 11 மணிக்கு மேலே எங்கள் தெருவில் வந்து நிற்கும்ஆட்டோக்கள் எங்கள் ஏரியா ஆட்டோக்கள் கிடையாது என்பது உறுதி. இவர்கள் எதற்காக இரவு நேரத்தில் இங்கே வந்து நிற்கிறார்கள் பிறகு 1 மணிக்கோ 2 மணிக்கோ கிளம்பி போகிறார்கள் என்பது கேள்வி குறியாக உள்ளது. தப்பித்து ஓடுவதற்காக அவர்கள் குறி வைக்கும் வீடுகளின் அருகே அவர்கள் ஏறிவரும் ஆட்டோக்களை நிறுத்தி வைக்கிறார்கள் என்று சந்தேகம் தோன்றுகிறது. சந்தேகம் ஏற்படாமல் இருப்பதற்காக பல சமயங்களில் இவர்கள் ஏறிவரும் ஆட்டோக்களை வேறு இடங்களில் நிறுத்தி வைத்துவிட்டு குறிவைக்கும் இடத்திற்கு வருவதும் உண்டு. ஏன்னெனில் பல நாட்களில் ஆட்டோக்களின் சப்தம் கேட்காது ஆனால் அவர்கள் வந்துவிட்டு போனதற்கான வேறு பல அடையாளங்கள் இருக்கும்.

இதனால் நான் அனைவருக்கும் அறிவிப்பது என்னவென்றால், எங்கள் வீட்டில் கொலையோ கொள்ளையோ ஆள்கடத்தலோ நடந்தால் இணையதள பகிர்வோரையும், எங்கள் வீட்டிற்கு தண்ணீர் சுத்தம் செய்யும் இயந்திரத்தின் சர்விஸ் ஆளாகவோ அவனது கூட்டாளிகளாகவோ [யுரேக்கா நிறுவனம்] இருப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது, (இவர்களைத் தவிர வேறு யார் வேண்டுமானாலும் கூட இப்படி செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளது) என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.