Author Topic: நெருப்பாய்ச் சுடுகிறது நிஜம்!  (Read 887 times)

Offline Maran




நிசப்தம் கலைக்கும்
ஓயாத சுவர்க்கோழி,
தவளைச் சத்தம்,
மின்சாரமற்ற காரிருள்,
தேநீர்க்கோப்பையோடொரு அந்தகாரம்!


மீண்டும் விரல் கடித்துப் போனது
எறும்பு ஒன்று.

என் அறை...
மௌனம் நிரம்பிய
என் இதயம் போல,
எழுதிய குறைகளாய்
கவிதைகள் பரப்பிய மேசை.

ஒரு மூலையில்
கசங்கிய காகிதங்களாய்

குப்பையாய்

கூட்டி அள்ளிய சொற்கூட்டம் !

இலக்கியங்கள்

வல்லின மெல்லினங்கள்

யாப்பு தொகை தொடையென்று

கண்சிமிட்டியபடி

விளங்காமலே விழிக்கிறேன் !



இப்போதெல்லாம்

உதட்டில் விஷம்!!



எங்கும் எதிலும்
உதாசீனம் ஒருக்களிப்பு
அக்கறைப்படுவதாயில்லை
மனங்கள் வலிப்பதைப் பற்றி.

தெருவில் அடம் பிடித்து
அழும் குழந்தையின் குரல்
நிசப்தம் கலைத்து
என் பல்கனி பாய்ந்து.

சிரிக்க வலுவற்ற மனம்
காலை உணவு சுமந்து விற்கும்
பசியோடு
பள்ளி செல்லாச் சிறுமி.

‘நான் யார்’
நெருப்பாய்ச் சுடுகிறது நிஜம்!!!



« Last Edit: December 18, 2016, 07:47:40 PM by Maran »

Offline Maran




நினைவின்
பேரிறைச்சலில்
நிசப்தம்
நடுங்கிப் போகிறது!!





Offline BlazinG BeautY

  • Full Member
  • *
  • Posts: 182
  • Total likes: 800
  • Total likes: 800
  • Karma: +0/-0
  • Gender: Female
  • வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீயாக இரு!
ஹாய் மாறன். அழகான வரிகள் .. நிறைய தரம் படித்தேன் ..நிறைய விஷயங்கள் அதனுள்.. நான் இப்பத்தான் குழந்தை ..

Offline Maran





நன்றி தோழி...  :)





Offline SarithaN

  • Sr. Member
  • *
  • Posts: 468
  • Total likes: 921
  • Total likes: 921
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வலியுணர்ந்த மனிதன் பிறரை துன்புறுத்தான்.....
தோழா மாறா வணக்கம்,

மானுக்குலத்தின் மேல்க்கொண்ட
அன்பு பரிவு எனும் ஆழமான பார்வையில்
உண்டாகி கிடக்கும் வலிகள் நிறைந்த
வாழ்க்கை கவிதையிது!

வரிகளில் புரிகிறது தோழா ஆழ்மனது.

எங்கும் எதிலும்
உதாசீனம் ஒருக்களிப்பு
அக்கறைப்படுவதாயில்லை
மனங்கள் வலிப்பதைப் பற்றி.

சிரிக்க வலுவற்ற மனம்
காலை உணவு சுமந்து விற்கும்
பசியோடு
பள்ளி செல்லாச் சிறுமி.


வாழ்த்துக்கள் தோழா, வாழ்க வளமுடன்.
நன்றி
« Last Edit: December 29, 2016, 08:30:09 PM by SarithaN »
உன்னைப் போலவே...அனைவரையும் நேசி...யேசு                       ...... Thou shalt love thy neighbour as thyself. Jesus.....

Offline Maran





உங்கள் கருத்திற்கு மிக்க‌ நன்றி சரிதன் நண்பா. உங்கள் வரிகள் கண்டு மகிழ்ந்தேன்.  :)





Offline SweeTie

அருமை  மாறன் ...வாழ்த்துக்கள்

Offline Maran





தங்கள் மனமார்ந்த வாழ்த்திற்கு மிக்க நன்றி தோழி இனியா...  :)





Offline LoLiTa

வணக்கம் மாறன். நான் லைக் போட்ராபோ இக்கவிதையின் அர்த்தம் கொஞ்சம் புரிஞ்சது. திரும்பே நோட்டிபிகேஷன்ஸ் ல காட்ராபோ இன்னும் கொஞ்சம் புரிஞ்சது. அழகான வார்த்தைகள், காலை உணவு சுமந்து விற்கும் சிறுமி , கூட்டி அள்ளிய சொற்கூட்டம். வாழ்துக்கள் மாறன்.nice kavidhai

Offline VipurThi

  • Hero Member
  • *
  • Posts: 879
  • Total likes: 1615
  • Total likes: 1615
  • Karma: +0/-0
  • Gender: Female
  • அன்புடையார் என்றும் உரியர் பிறர்க்கு...
Maran anna kavipayanam thodara vazhthukkal:)