அன்புவழியில் நடப்போமே :-

* அன்பு உள்ள இடத்தில் அச்சத்திற்கு இடம் இருப்பது இல்லை. கவலை, சோர்வு, அச்சம் ஆகிய பண்புகள் அனைத்தும் அன்புணர்வால் அகற்றப்படுகின்றன.
* மனக் கட்டுப்பாட்டுடன் வாழ்தல், பிறர் நலம் வேண்டுதல், துன்பம் கண்டு இரங்குதல், இறைவனைப் போற்றுதல் இவையே ஒரு மனிதன் ஆற்ற வேண்டிய கடமைகள்.
* இருப்பது ஒரே தெய்வம் மட்டுமே. அதனையே ஆயிரமாயிரம் பெயர்களால் வணங்குகிறோம்.
* அன்பைக் காட்டிலும் சிறந்த தவநெறி வேறில்லை. அதனால் மக்கள் அனைவரும் அன்பு வழியில் வாழ்ந்தால் இன்பம் அனைத்தையும் பெற்று சிறப்புடன் வாழலாம்.