Author Topic: ~ பற்களும் பாதுகாப்பு முறைகளும்! ~  (Read 1956 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 227465
  • Total likes: 29060
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
சிகிச்சை முறைகள்

பல்சொத்தை:



  பல் சொத்தை எந்த அளவுக்குப் பரவியுள்ளது, அது எந்த நிலையில் உள்ளது என்பதைப் பொருத்து சிகிச்சை முறைகள் மாறும். பல்லில் எனமாமல், டென்டின், பற்கூழ் என மூன்று பகுதிகள் உள்ளன. இதில் பற்கூழ் பகுதிதான் பற்களின் இதயம் என்று சொல்லும் அளவுக்கு முக்கியமானது. பற்கூழில் இருந்து எவ்வளவு தூரம் பல் சொத்தை உள்ளது என்பதைப் பொருத்து ஃபில்லிங் செய்ய வேண்டுமா அல்லது ரூட் கெனால் செய்ய வேண்டியிருக்குமா என்று முடிவு செய்யப்படும். 



  பல் சொத்தை உள்ளதா, எந்த நிலையில் பாதிப்பு உள்ளது என்பதை சாதாரணப் பரிசோதனை மூலமாகவும், பிறகு எக்ஸ்ரே மூலமாகவும் கண்டறியப்படும். சொத்தையானது எனாமல் வரை மட்டுமே இருந்தால் அதற்கு சாதாரண ஃபில்லிங் எனப்படும் நிரப்புதல் போதுமானது. டென்டின் வரை பாதிப்பு இருந்தால் பல் கூச்சம் இருக்கும். அதைத் தொடர்ந்து பல் வலி வரும். பற்கூழில் இருந்து எவ்வளவு தூரம் பாதிக்கப்பட்டுள்ளது என்பதைப் பொருத்து ந்பில்லிங் செய்யப்படும்.
 சொத்தையானது பற்கூழுக்கு அருகில் அல்லது பற்கூழ் வரை சென்றுவிட்டது என்றால் ரூட் கெனால் மட்டுமே தீர்வு. ஒரு காலத்தில் இப்படிப்பட்ட பாதிப்புக்கு பல்லைப் பிடுங்குவது மட்டுமே தீர்வாக இருந்தது. அதற்கு மாற்றாக வந்ததுதான் ரூட் கெனால்.



 பல்லின் உள்ளே வேர்ப் பகுதி உள்ளது. இந்த வேர் வழியாகத்தான் ரத்தமானது பல்லின் மையப் பகுதிக்கு வருகிறது. சொத்தையானது இந்த மையப் பகுதியைத் தாக்கிப் பாதிப்பை ஏற்படுத்துகிறது. சொத்தை வந்த வழியாக கிருமித் தொற்றை சுத்தம்செய்து, பற்கூழை அகற்றிவிட்டு, வந்த பாதையை சுத்தம்செய்து, பிரத்யேகமான எதற்கும் பாதிப்பை ஏற்படுத்தாத, பாதிக்கப்படாத பொருளைக்கொண்டு மூடுவதுதான் ரூட் கெனால்.
 ரூட் கெனால் செய்த பிறகு, 15 நாட்களுக்குப் பிறகு அந்த பல்லுக்கு கேப் போடப்படும்.
மரம் பச்சையாக இருக்கும்போதுதான் கிளைகளை வளைக்க முடியும். காய்ந்துவிட்டால், வளைக்கும்போது ஒடிந்துவிடும். ரூட் கெனால் செய்து, பற்கூழ் பகுதியை அகற்றிவிடுவதால் பல்லுக்கு ரத்த ஓட்டம் இருக்காது. இதனால் பல் காய்ந்துபோய் நொறுங்கிவிடும். இதைத் தவிர்க்க கேப் போடுவது மிகவும் அவசியம். செராமிக், தங்கம் உள்ளிட்ட உலோகங்கள் என அவரவர் வசதிக்கு ஏற்ப இதைப் போட்டுக்கொள்ளலாம்.
  சிலருக்கு ரூட் கெனால் சிகிச்சைகூட செய்ய முடியாத அளவுக்கு சில பற்கள் மிகவும் மோசமாக இருக்கும். அத்தகைய பற்களை அகற்றிவிடுவது மட்டுமே ஒரே வழி. பல் மருத்துவரை குறிப்பிட்ட இடைவெளியில் சந்திப்பதன் மூலம் பல் சொத்தையை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சரிப்படுத்திவிட முடியும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 227465
  • Total likes: 29060
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
செயற்கை பல்:



ஒரு பல் எடுத்தால், அதன் அருகில் உள்ள மற்ற பற்கள் அந்த இடத்தை நோக்கி நகர ஆரம்பிக்கும். மேல் பகுதியில் உள்ள பல் கிட்டத்தட்ட பயனற்ற பல் போலத்தான். அதுவும் பல் இல்லாத இடம் நோக்கி நகர ஆரம்பிக்கும் (விவீரீக்ஷீணீtவீஷீஸீ ஷீயீ tமீமீtலீ). இதைத் தவிர்க்க, அந்த இடத்தில் பொய் பல் கட்ட வேண்டியது மிகவும் அவசியம். முன்பு பிரிட்ஜ் என்ற முறையில் இடைவெளி உள்ள இடத்தில் செயற்கைப் பல் கட்டப்பட்டது. ஆனால் இந்த முறையில் நன்றாக இருக்கும் இரண்டு பற்களையும் செதுக்க வேண்டியிருந்தது. அந்த இரண்டு பற்களின் ஆதரவுடன் எளிதில் கழன்றுவிடாதபடியான செயற்கைப் பல் கட்டப்பட்டது.



பக்கத்தில் உள்ள இரண்டு பற்களின் ஆதரவில் இந்த செயற்கைப் பல் இருப்பதால், அந்த பற்களில் ஒன்றில் பாதிப்பு வந்தாலும் இதைப் பொருத்தமுடியாது. இது போன்ற பாதிப்பு உள்ளவர்களுக்கும், பல பற்கள் மாற்ற வேண்டும் என்ற நிலையில் உள்ளவர்களுக்கும் பயன்படும்படி வந்ததுதான் இம்பிளான்ட். அதாவது செயற்கையாக பல்லின் வேர் போன்ற அமைப்பு உருவாக்கப்பட்டு பல் கட்டும் தொழில்நுட்பம்.
« Last Edit: June 27, 2014, 11:31:09 AM by MysteRy »

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 227465
  • Total likes: 29060
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
இம்ப்ளான்ட்:

இயற்கையாக எப்படி வேர் போன்ற அமைப்புடன் பல் உள்ளதோ அதே போன்று செயற்கையாக ஸ்கூரு போடும் அமைப்பு இம்ப்ளான்ட் அறுவைசிகிச்சை மூலம் உருவாக்கப்படும். குறிப்பிட்ட கால இடைவெளியில் இதன் மேல் செயற்கைப் பல் கட்டப்படும். கழன்றுவிடும் என்ற பயம் இந்தத் தொழில்நுட்பத்தில் இல்லை. ஒரு பல் முதல் அனைத்துப் பற்களுக்கும் இம்பிளான்ட் சிகிச்சை செய்யலாம்.



அச்சு அசலாக, இயற்கைப் பல் போன்று தோற்றம் அளிக்கும் செராமிக் பற்களைக் கட்டிக்கொள்ளலாம். 
தற்போது சிபிசிடி என்கிற டென்டல் சிடி ஸ்கேன் கருவி வந்துள்ளது. இதன்மூலம், எலும்பின் அடர்த்தி, ஆழம், இம்பிளான்ட் போடும் இடத்தில் நரம்புகள், ரத்தக் குழாய்கள் செல்கிறதா, நரம்பு ரத்தக்குழாய்க்குப் பாதிப்பின்றி எப்படி இம்பிளான்ட் போடலாம் என்பது போன்ற முடிவுகள் எடுக்க இந்த டென்டல் சிடி ஸ்கேன் உதவும்.
ஒரே நாளில் பல் கட்டும் நவீன முறைகளும் உள்ளன. இதற்கு டாக்டரை அணுகி எந்த மாதிரியான பல் வேண்டும் என்பது உள்பட சில ஆலோசனைகள், பரிசோதனைகள், வடிவமைப்பு போன்றவற்றை முடிவு செய்துவிட வேண்டும். அறுவைசிகிச்சை நடக்கும் தினத்தில் இம்பிளான்ட் பொருத்தப்பட்டு, ஏற்கனவே தயாராக உள்ள பல் செட் அதில் பொருத்தப்படும்.
« Last Edit: June 27, 2014, 11:31:33 AM by MysteRy »

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 227465
  • Total likes: 29060
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
டூத் லேமினேட்:



திருமணத்துக்குத் தயாராக இருப்பவர்கள் கடைசி நேரத்தில் நிறம் மாறிய பல், பல் இடைவெளியே அகற்ற நினைப்பார்கள். குறுகிய காலத்தில் இதை சரிசெய்ய வந்ததுதான் டூத் லேமினேட் சிகிச்சை. செராமிக் கொண்டு இந்த சிகிச்சை செய்யப்படும். குறுகிய காலத்தில் செய்தாலும் இது நிரந்தர அமைப்புதான்.
« Last Edit: June 27, 2014, 11:31:57 AM by MysteRy »

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 227465
  • Total likes: 29060
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
லேசர் சிகிச்சைகள்:

ஈறுகளில் அறுவைசிகிச்சை செய்ய, சொத்தைப் பல்லில் உள்ள கிருமித் தொற்றை அழிக்க, பற்களை வென்மையாக்க எனப் பல வகைகளில் லேசர் கருவி பயன்படுத்தப்படுகிறது. சிலருக்கு ஈறுகள் மிகவும் கருப்பாக இருக்கும். இவர்களுக்கு லேசர் சிகிச்சையின் மூலம் பிங்க் நிறத்துக்கு ஈறுகளைக் கொண்டுவர முடியும்.
« Last Edit: June 27, 2014, 11:32:20 AM by MysteRy »

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 227465
  • Total likes: 29060
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
எலும்பு கிராஃப்ட்டிங்:

சிலருக்கு பற்கள் எல்லாம் விழுந்து போயிருக்கும். அல்லது விழும் நிலையில் இருக்கும். அவர்களுக்கு இம்பிளான்ட் செய்யலாம் என்றால், தாடையின் அடர்த்தி மற்றும் உயரம் குறைவாக இருக்கும். இதனால் இம்பிளான்ட் செய்ய முடியாது என்று டாக்டர்கள் தெரிவிப்பார்கள். இவர்களுக்கு செயற்கைப் பல் கட்டும் வகையில் அளிக்கப்படுவதுதான் எலும்பு கிராஃப்ட்டிங் சிகிச்சை. முகத்தின் மேல் தாடையில் சைனஸ் என்ற ஒரு அமைப்பு உள்ளது. மேல்தாடைக்கும் சைனஸ் அமைப்புக்கும் இடையே உள்ள எலும்பின் தடிமன் மற்றும் உயரம் எவ்வளவு உள்ளது என்பதை ஓ.பி.ஜி. எக்ஸ் ரே மூலம் கண்டறியலாம். 8-10 மி.மீ. அளவுக்கு தடிமன் இருந்தால், அவர்களுக்கு இம்பிளான்ட் செய்ய முடியும். 5-6 மி.மீ. அளவுக்கு எலும்பு இருந்தால் சைனஸ் லிஃப்ட் என்ற சிகிச்சை முறையில் இம்பிளான்ட் செய்யப்படுகிறது. அதாவது உடலின் வேறு பகுதியில் இருந்து எலும்பை எடுத்து அறுவைசிகிச்சை மூலம் தாடையில் பொருத்தி, பின்னர் இம்பிளான்ட் செய்யப்படும். இதேபோன்று ஈறுக்கும் அறுவைசிகிச்சை செய்யப்படுகிறது.
« Last Edit: June 27, 2014, 11:32:41 AM by MysteRy »

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 227465
  • Total likes: 29060
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
அவசியம் பார்க்க வேண்டும் பல் மருத்துவரை...

  குழந்தைக்கு ஆறு மாதம் ஆனதும், முதன் முறையாகப் பல் மருத்துவரிடம் குழந்தையை கொண்டுசென்று காண்பிக்க வேண்டும். இது அந்தக் குழந்தைக்கு எதிர்காலத்தில் பல் தொடர்பான பிரச்னைகள் வராமல் தடுக்க உதவும்.



  பல் முளைக்கும்போது ஏதேனும் பிரச்னை இருந்தாலும் அதைக் கண்டறிந்து சரிப்படுத்தலாம். ஆறு மாதங்கள் அல்லது ஒரு வருட இடைவெளியில் பல் பரிசோதனை செய்துகொள்வதன் மூலம், சொத்தைப் பல், ஈறு நோய்கள் வராமல் தடுப்பதுடன், ஆரம்ப நிலையிலேயே அதை சரிப்படுத்திவிட முடியும்.
பற்களின் அமைப்பு, வரிசை போன்றவற்றில் குறைபாடு இருந்தாலும் சரி செய்துவிடலாம்.
 சர்க்கரை நோயாளிகளுக்கு ஈறு தொடர்பான நோய்கள் வருவதற்கான வாய்ப்பு அதிகம்.
ஆறு மாதங்களுக்கு ஒரு முறை டாக்டரை அணுகி முழுப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டியது அவசியம்.
  சர்க்கரை நோயாளிகள் இரவு படுக்கும் முன்பு பால் மற்றும் இனிப்புப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும். கூர்மையான பற்களினால், ஈறுகளிலோ, நாக்கிலோ புண் ஏற்பட்டால், உடனடியாக பல் மருத்துவரிடம் காண்பித்து சரிசெய்துகொள்ள வேண்டும்.
  லேசான வலி மற்றும் வீக்கம் இருந்தாலே, மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டியது அவசியம்.
« Last Edit: June 27, 2014, 11:33:07 AM by MysteRy »

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 227465
  • Total likes: 29060
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
பற்களின் பகைவன்

புகையிலைப் பொருட்களை பயன்படுத்துவதால் பற்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து கும்பகோணத்தைச் சேர்ந்த பல் மருத்துவர் பி.பிரகாஷ் விளக்குகிறார்:



  இன்று உலக அளவில் தவிர்க்கக் கூடிய மரணங்கள் அதிகமானதற்கு புகையிலைப் பழக்கம் மிக முக்கியக் காரணம். புகை பிடிப்பதாலும், புகையிலைப் பொருட்களை மெல்லுவதாலும் வாய் பெருமளவில் பாதிக்கப்படுகிறது.
  புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு வாயின் வெப்பநிலை அதிகரிக்கும்.  வாயில் உள்ள திசுக்கள் மாற்றம் ஏற்பட்டு உலர்ந்து போய் நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது. இதனால் மிக எளிதில் பூஞ்ஜை மற்றும் வைரஸ் போன்ற நுண்ணுயிர் தொற்று ஏற்படலாம்.
  புகைப்பவர்களுக்கு மற்றவர்களைவிட புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு ஆறு மடங்கு அதிகரிக்கும்.
 புகைபிடிப்பவர்களுக்கு ஈறு நோய் வருவதற்கான வாய்ப்பு இரு மடங்கு அதிகம். ஈறு வீக்கம், பல் ஆடுவது, ஈறுகளில் சீழ், ரத்தம் போன்ற பிரச்னைகள் வரலாம். புகைப்பிடிப்பதால் பற்களில் கறை ஏற்படும்.

« Last Edit: June 27, 2014, 11:33:29 AM by MysteRy »

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 227465
  • Total likes: 29060
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
செய்யக்கூடியவை:

 சாப்பிட்டதும், ஒரு மணி நேரம் கழித்து, அவசியம் பல் துலக்கி வாய் கொப்பளிக்க வேண்டும்
 தூங்கச் செல்வதற்கு முன்பு பல் துலக்க வேண்டும்
 புகைத்தல், மது அருந்துதல் கைவிடுங்கள்.
 போதுமான அளவுக்கு தண்ணீர் அருந்துங்கள்.
 உணவு சாப்பிடும் நேரத்தில் மட்டும் இனிப்பு சாப்பி டுங்கள்.
 ஜூஸ் செய்து குடிப்பதற்குப் பதிலாக பழங்களைக் கடித்து சாப் பிடுங்கள்.
 ஒரு நாளைக்கு ஒரு முறையாவது பால் பொருட்களைச் சேர்த்துக் கொள்ளுங்கள்.
 குளிர்பானம் குடிப் பதைத் தவிருங்கள். இல்லையெனில், ஸ்ட்ரா பயன்படுத்துங்கள்.
குறைந்தது ஆறு மாதங்களுக்கு ஒரு முறை பல் மருத்துவரை சந்தியுங்கள்.

« Last Edit: June 27, 2014, 11:33:53 AM by MysteRy »

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 227465
  • Total likes: 29060
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
செய்யக் கூடாதவை:

 எவ்வளவு கோபமாக் இருந்தாலும் 'நறநற’வெனப் பல்லைக் கடிக்காதீர்கள்
 நகத்தைக் கடிக்கக்கூடாது.  அதன் மூலம் கிருமிகள் வாய்க்கு சென்று வியாதிகளைப் பரப்பிவிடும்.
 பல்லை அழுத்தித் தேய்க்காதீர்கள்.
 பாட்டில் மூடி போன்ற கடினமான பொருட்களை பல்லால் கடித்துத் திறக்க முயற்சிக்காதீர்கள். பற்களுக்கு சேதம் ஏற்படுத்துவதுடன், உதடுகளிலும் கீறல் அல்லது காயம் ஏற்படலாம்.
மேற்சொன்ன ஆலோசனைகளைப் பின்பற்றினால், ஆரோக்கியமான புன்னகை உங்கள் வசம்.
« Last Edit: June 27, 2014, 11:34:17 AM by MysteRy »

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 227465
  • Total likes: 29060
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
தவிர்க்க வேண்டியவை:

கார்பனேட்டட் கோலா குளிர்பானங்களில் உள்ள அமிலத்தன்மையானது பல்லின் எனாமலைப் பாதிக்கும்..



நொறுங்க தின்றால்... பல்லுக்கு ஆயுசு!
பல் வலி, பல் ஆடும் பிரச்னை உள்ளவர்கள் காய்கறி, பழங்களை அப்படியே கடித்துச் சாப்பிடும்போது, பல்லில் விரிசலை ஏற்படுத்தி,  விழவும் செய்துவிடும். எனவே, கடிக்க ஏற்ற வகையில் சிறு துண்டுகளாக நறுக்கி நன்றாக மென்று சாப்பிடுங்கள்.
« Last Edit: June 27, 2014, 11:34:39 AM by MysteRy »

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 227465
  • Total likes: 29060
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
'ஷாக்’லெட்

பல்லில் ஒட்டிக்கொள்ளக் கூடிய கடினமான சாக்லெட்களில் உள்ள இனிப்பு நீண்ட நேரத்துக்கு நம் பல் இடுக்குகளில்  ஒட்டிக்கொள்ளும். இதனால் பாக்டீரியா தொற்று ஏற்பட்டு பற்கள் பாதிக்கப்படுவதால், இவற்றை தவிர்ப்பது நல்லது.
உருளைக்கிழங்கு சிப்ஸ் மற்றும் பாப்கார்ன்: சிப்ஸ் துகள்கள் பல் இடுக்குகளில் சிக்கிக்கொள்ளும்போது அதைச் சிதைக்கும் பாக்டீரியாக்கள் அமிலத்தை வெளியேற்றி பற்சிதைவுக்கு வழிவகுக்கிறது. பாப்கார்ன் கவரின் அடியில் பொரியாத சில சோள விதைகள் இருக்கும். மிகக் கடினமான இந்த விதைகளைக் கடிக்கும்போது, பல்லுக்குப் பாதிப்பு ஏற்படலாம்.
உலர் பழங்கள்: திராட்சை, பேரீட்சை போன்ற உலர் பழங்களை சாப்பிட்டதும் பல்லின் இடுக்குகளில் நன்கு ஒட்டிக்கொள்ளும் தன்மை கொண்டவை. இவற்றை, சாப்பிட்டதும் பல்லைச் சுத்தம் செய்ய மறந்துவிடக் கூடாது.
« Last Edit: June 27, 2014, 11:35:06 AM by MysteRy »