Author Topic: ~ தத்துவங்கள்... ~  (Read 742 times)

Offline MysteRy

~ தத்துவங்கள்... ~
« on: May 22, 2014, 07:14:04 PM »
தத்துவங்கள்...




* ஆற்றில் ஓடுகின்ற நீரானது தடைகளை கண்டு நின்றுவிடாமல் வளைந்து, ஒதுங்கி ஓடுவதுபோல, நாமும் வெற்றியை நோக்கி செல்ல வேண்டும்.

* நேற்றைய கவலைகளை ஒதுக்கிவிட்டு, இன்றைய தினத்தை எப்படி பயனுடையதாக்குவது என்று சிந்திப்பவன் வாழ்வில் வெற்றி பெறுகிறான்.

* பின்விளைவுகளை பற்றி எண்ணி தயங்கிக் கொண்டு இருக்காமல், முயற்சியுடனும், முழு ஆர்வத்துடனும் செயல்படுபவர்களை வெற்றி தேடிச் செல்கிறது.

* எல்லாவற்றையும் சிறப்பாக செய்வதும், எதற்கும், எப்பொழுதும் தயாராக இருப்பதும் வெற்றியின் ரகசியம் ஆகும்.

* சரியாக திட்டமிட்டு, சுறுசுறுப்போடும், சிறப்பாகவும் செயல்படுபவர்களே பெரும் வெற்றியை அடைகிறார்கள்.

* மனம் தளராமல் நம்பிக்கையோடு உழைப்பவர்கள் நிச்சயமாக தங்களது குறிக்கோளை அடைய முடியும்.

* எந்த ஒரு சாதனையும் செய்யாமல் வாழ்க்கை முழுவதும் வாழ்வதைவிட, புகழ் சூழ்ந்த ஒரு மணி நேர வாழ்வு கூட மேன்மையானதாகும்.

* நமது லட்சியம் எவ்வளவு பெரிதாக இருந்தாலும், தன்னம்பிக்கையோடு செயல்பட்டால் நிச்சயம் நிறைவேறும்.

* வெற்றியின் உச்சிக்கு செல்ல விரும்பினால், உங்கள் பணியை கீழ் மட்டத்தில் இருந்தே சிறப்பாக செய்யுங்கள்.

Offline MysteRy

Re: ~ தத்துவங்கள்... ~
« Reply #1 on: June 18, 2014, 08:48:13 PM »
தத்துவங்கள்...




* ஒவ்வொருவரும் தனது வியாபாரத்தில் வெற்றி பெற வேண்டுமானால், லாபம் பெறுவது, வாடிக்கையாளர்களை திருப்திபடுத்துவது இரண்டையும் சமமாக கருத வேண்டும்.

* எந்த ஒரு தொழிலுக்கும் அன்பு நிறைந்த உபசாரமும், இனிமை கலந்த உரையாடலும் வெற்றியை தேடி தரும்.

* பொறுப்பில் இருக்கும் ஒவ்வொரும் வெற்றியும், தோல்வியும் தம்முடைய பணியில் இருக்கிறது என்பதை உணர்ந்து செயல்படவேண்டும்.

* எந்த ஒரு செயலிலும் மன துணிச்சலுடன் முடிவு எடுப்பவர்கள் தன் வாழ்வில் வெற்றி பெறுகிறார்கள்.

* ஒரு காரியத்தை சாதிக்க நினைத்து, தோல்வி அடையும் ஒவ்வொரு சமயத்திலும் வெற்றிப்படிகளில் அடியெடுத்து வைக்கிறோம் என்று எண்ணினால் நிச்சயம் வெற்றி பெறலாம்.

* கடுமையாக உழைப்பவனை விட, திறமையாக உழைப்பவன் வாழ்வில் முன்னேறுகிறான்.

* ஆற்றில் ஓடுகின்ற நீரானது தடைகளை கண்டு நின்றுவிடாமல் வளைந்து, ஒதுங்கி ஓடுவதுபோல, நாமும் வெற்றியை நோக்கி செல்ல வேண்டும்.

* நேற்றைய கவலைகளை ஒதுக்கிவிட்டு, இன்றைய தினத்தை எப்படி பயனுடையதாக்குவது என்று சிந்திப்பவன் வாழ்வில் வெற்றி பெறுகிறான்.

* பின்விளைவுகளை பற்றி எண்ணி தயங்கிக் கொண்டு இருக்காமல், முயற்சியுடனும், முழு ஆர்வத்துடனும் செயல்படுபவர்களை வெற்றி தேடிச் செல்கிறது.

* எல்லாவற்றையும் சிறப்பாக செய்வதும், எதற்கும், எப்பொழுதும் தயாராக இருப்பதும் வெற்றியின் ரகசியம் ஆகும்.