Author Topic: IPL- க்ரிகெட்டா, கிறுக்கா  (Read 5479 times)

Offline Global Angel

IPL- க்ரிகெட்டா, கிறுக்கா
« on: December 01, 2011, 09:45:05 PM »
IPL- க்ரிகெட்டா, கிறுக்கா

கிரிகெட் என்பது வெறும் விளையாட்டு மட்டும்தானா, அல்லது அத்தியாவசிய தேவையா, கிரிகெட் என்பதை எதில்வேண்டுமானாலும் சேர்த்துக் கொள்ளும் அளவிற்கு அதன் புகழ் இந்திய மக்களிடையே பெரும் வரவேற்ப்பை பெற்று முதலிடம் வகிக்கிறது. பொழுது போக்கு அம்சங்களுக்கு எத்தனை மணிநேரம் வேண்டுமானாலும் செலவு செய்வதற்கு ரசிகர் கூட்டம் நிரம்பி வழிவதுதான் இதன் மகத்துவத்திற்கு மிகவும் முக்கிய காரணம், கிரிகெட்டை விளையாட்டு என்றும் பொழுது போக்கு என்றும் அர்த்தப்படுத்தி பார்த்த நாட்கள் கடந்துவிட்டது தற்போது கிரிகெட் பலருக்கு முக்கிய வேலையாகவே ஆகிவிட்டது துரதிஷ்டவசமே.

பணமிருப்பவர் கையில் வியாபாரமாகிப்போன கிரிகெட், சூதாட்டக்காரர்களின் கையில் சூதாட்டமாகிப்போன கிரிகெட், ரசிகர்களின் கையிலே பைத்தியமாகிப் போன கிரிகெட், பத்திரிகைகளிலே தலையங்கமாகிப் போன கிரிகெட், பலரை கோடீஸ்வரர்களாக்கி பார்க்கும் கிரிகெட், சிரலரை ஏக்கப்பெருமூச்சு விட செய்யும் கிரிகெட், அரசியலில் கூட மூக்கை நுழைக்க பார்க்கும் கிரிகெட், பலரை பகல்நேர நட்சதிரங்களாக்கிய கிரிகெட், வேண்டாத விரோதங்களை சம்பாதித்த வீரர்களை சுமந்த கிரிகெட், 'லட்சிய' வீரர்களை கோடீஸ்வரர்களாக்கிய கிரிகெட், இப்படி பல உலக அற்புதங்களை உள்ளடக்கியுள்ளது கிரிகெட்.

நாட்டிற்கும் மிக முக்கியமாக இந்தியநாட்டிற்கு மிகவும் அவசியமானதாகி நாளுக்குநாள் தனது அந்தஸ்த்தை உயர்த்திக்கொண்டு வருகிறதை பார்க்கும் போது வருங்காலத்தில் கிரிகெட் அறியாதவரை, ஆர்வமில்லாதவரை இந்திய திருநாட்டில் வாழ தடை செய்தாலும் அதிசயப்படுவதற்க்கில்லை. நமது தேசத்தில் பிழைக்கத் தெரிவதைவிட நடிக்கத் தெரிந்திருப்பதும், கிரிகெட் தெரிந்திருப்பவராக இருப்பதும் கட்டாயமான தகுதிகளாகி அப்படிப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கிரிகெட் ஜுரம் இந்திய மண்ணை இறுக பிடித்திருக்கும் குணமாக்க இயலாத தீரா வியாதி. இந்திய மண்ணில் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பினும் அது நாட்டிற்கும் வீட்டிற்கும் பயனளிக்கும் வகையில் உள்ளதா, கேள்வி மட்டுமே மிஞ்சும்.

சிறிய ஜப்பானில் குறைந்த மக்கள் தொகையில் எத்தனை எத்தனை அசர வைக்கும் சாத்தியங்கள் நடந்து வருகிறது என்பதை நமது இளைஞர் பட்டாளம் அறிந்திருக்குமா, அப்படி அறிந்திருந்தால் தன் 'பொக்கிஷ'ப் பொழுதை வீணே கழிக்க மனம் வருமா. யானை தன் பலத்தையும் பலகீனத்தையும் அறிந்து செயல் பட்டால் உலகமும் அதில் உயிர் வாழும் உயிரினங்களும் வாழ இயலாது, அது போல இந்திய நாட்டின் பலம், பலகீனம் இன்னும் முழுமையாக அறிந்து கொள்ளப்படாதது தான் பலகீனம். எதிர்கால இந்தியாவை செழிக்கச் செய்யும் இன்றைய இந்திய வாலிபர்களின் ஒட்டு மொத்த பொழுது போக்கும் கடமை உணர்வும் வீணடிக்கப்படுவது எவ்விதத்திலும் சரியானது இல்லையே.

இன்றைய கிரிகெட் வீரர் நாளைய பிரதமர், ஜனாதிபதி, முதலமைச்சர், அமைச்சர் ஆவதில் மட்டும் என்ன விதி விலக்கா இருந்துவிடப் போகிறது. ஜனநாயகத்தில், மக்களாட்ச்சியில் எதுவும் நடக்கும் என்று எதிர்பார்ப்பதில் தவறு ஒன்றும் இல்லை.

என்று தணியும் இந்த சுதந்திர தாகம் என்பதைப்போல என்று தணியும் இந்த மட்டை பந்து தாகம்.