Author Topic: என்ன செய்துகொண்டிருப்பாள் என்னவள்  (Read 571 times)

Offline thamilan

இந்தக் கவிதையின் நாயகி
இப்போது என்ன செய்துகொண்டிருப்பாள்

முத்துமுத்தாய்
நெற்றியில் வியர்க்க
சமையல் வேலையாய் இருப்பாளோ

தளர்வாக உடையணிந்து
மெத்தையில் சாய்ந்தபடி
தொலைக்காட்சியில் தொலைந்திருப்பாளோ

மார்பில் புத்தகத்தை அணைத்தபடி
ஆழ்துயிலில் இருப்பாளோ

என் நினைவில்
நகத்தைக் கடித்தபடி
நினைவுக்கடலில் முழ்கி இருப்பாளோ

குடும்பத்தாருடன் குதுகலமாக
அரட்டை அடித்தபடி
சிரித்து பேசிக்கொன்டிருப்பாளோ

இல்லை
எதுவும் சொல்லமுடியாத ஒன்றை
சொல்ல முனையும்
இது போன்றதொரு கவிதையை
சிந்தித்துக் கொண்டிருப்பாளோ

Offline PiNkY

  • Full Member
  • *
  • Posts: 243
  • Total likes: 25
  • Karma: +0/-0
  • Gender: Female
  • If Nothing Lasts 4ever..!! Will U Be My Nothing..?
என் நினைவில்
நகத்தைக் கடித்தபடி
நினைவுக்கடலில் முழ்கி இருப்பாளோ
   இல்லை
எதுவும் சொல்லமுடியாத ஒன்றை
சொல்ல முனையும்
இது போன்றதொரு கவிதையை
சிந்தித்துக் கொண்டிருப்பாளோ



<<<<<<< Super lines somali ithu .. alga elthrka .. (F) kavinjan da ne :D

Offline NasRiYa

என் நினைவில்
நகத்தைக் கடித்தபடி
நினைவுக்கடலில் முழ்கி இருப்பாளோ -------------->wow nice

ரெம்ப ஆச தான்.டமால் உங்கள் நாயகி எங்களோடு FTC la Chat செய்துகொண்டு
இருக்கிறாள்