பொன்மொழிகள்...

1. உழைப்பின் சக்தியே உலகில் மிகமிக உன்னதமானது. - லிங்கன்
2. பார்வையற்றவன் குருடன் அல்ல; தன் குற்றங்களை உணராதவனே குருடன். - காந்தியடிகள்
3. உண்மைக்காக எதையும் துறக்கலாம். ஆனால் எதற்காகவும் உண்மையைத் துறக்கக் கூடாது. - விவேகானந்தர்
4. உழைப்பு மூன்று தீமைகளை நம்மிடமிருந்து நீக்குகிறது: தொந்தரவு, தீய ஒழுக்கம், வறுமை. - வால்டேர்
5. மனிதனின் தலைசிறந்த நண்பர்கள் அவனது பத்து விரல்கள்.- ராபர்ட் கோலியர்
6. ஒருவர் தான் செய்யும் தவறுகளை ஒப்புக்கொள்வதுதான் உள்ளத் தூய்மையைக் காட்டும் வழி. - அலெக்ஸôண்டர் போப்
7. நல்லொழுக்கம் என்பது உனக்கு நீயே அளித்துக் கொள்ளும் நன்மதிப்பு. - பெர்னார்ட்ஷா
8. அதிர்ஷ்டங்களை உண்டாக்கிக் கொள்வது நாம். ஆனால் அதை விதி எனச் சொல்கிறோம். - ஆல்ராய்