Author Topic: பாரதி மறுபடி நீ பிறந்திடு  (Read 718 times)

Offline thamilan

பாரதியே
பாதியில் போய்ச் சேர்ந்தாய்
சாகவரம் பெற்றினும்
சிலகாலம் வாழ்ந்திருந்தால்
தமிழ்நாட்டின் பெரும்புலவன்
தற்கொலை புரிந்திட்டான் என
தரணியே தலை குனிந்திருக்கும்

கட்டாயம் நடக்குமென
கண்டிட்ட கனவெல்லாம்
கானல் நீரனதிங்கே

காவிரி தென்பெண்ணை பாலாறு  இங்கே
காய்ந்துக் கிடக்குது
வெறும் மணலாறாய்
வையம் போற்றிய வைகையவள்  இன்று
வெறும் வாய்க்காலாய்
காவிரிதாயவள் கண்ணீரும் வற்றி
கையேந்தி நிற்கிறாள் கர்நாடகத்திடம்

சிங்களத் தீவிநிட்கொரு பாலமமைத்து
சிங்கத் தமிழர்தம் உறவு கேட்டாயே இன்று
ஈழத்தமிழர்கள் ஈனத்தமிழர்களாய்
உயிர் மானமிழந்து வீழ்ந்தனரே
உதவிக்கரம் நீட்ட ஒருவரும் வரவில்லையே

பாருக்குள்ளே நல்ல நாடு
பாரதம் என்றாய்
பாரதுக்குள்ளே பார்க்கும் இடமெல்லாம்
பஞ்சமில்லை பார்களுக்கு

பாரதியே நீ
மறுபடி மானிடனாய் பிறப்பதென்றால்
பரிதாப கவிஞனாக
ஒரு போதும் பிறந்திடாதே

சுடுநெருப்பாய் நீ சொல்லிவைத்த
சீர்திருத்த கருத்துக்கள்
நனவாக வேண்டுமெனில்

எழுதுகோலை தூக்கி எறி
கையில் சாட்டையுடன் மறுபடி பிறந்திடு
பாட்டுக்குத் திருந்தாத
பாரதத்தின் புதல்வர்கள்
சாட்டையின் சொடுக்குக்கு
சந்தோசமாக பணிந்திடுவார்
« Last Edit: March 10, 2014, 09:47:51 PM by thamilan »

Offline ammu

பாரதியை  புதைக்கவில்லை  விதைத்திருக்கிறோம் 
நண்பரே 
பல  பாரதிகள்  பாரதத்திலே 
அதில்  சில  நிழல்  உங்கள்  உள்ளே  :)

Offline thamilan

அம்மு நன்றி
பாரதி கண்ட பாரதம் பரிதாபமான நிலையில். ஒரு தமிழ்மகனாக ஒரு குடிமகனாக என்னுள்ளும் பாரதி கண்ட கனவு பலிக்காத என்று ஒரு ஆவல் என்றும் இருக்கிறது

Offline பவித்ரா

  • FTC Team
  • Hero Member
  • ***
  • Posts: 621
  • Total likes: 929
  • Total likes: 929
  • Karma: +0/-0
  • மாற்றம் ஒன்று தான் மாறாதது ........
என்ன தமிழன் பொறுக்க முடியாத கோவமா பாரதி சொன்னது நடக்கலன்னு அது கனவாகவே இருந்து விடாது நடக்கும்
என்னை  எடை  போடுவதற்கு நீங்கள் தராசும் அல்ல  . நான் விலை பொருளும் அல்ல .....