Author Topic: ~ எளிய இய‌ற்கை மருத்துவம்:- ~  (Read 816 times)

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 227450
  • Total likes: 29057
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
எளிய இய‌ற்கை மருத்துவம்:-




மிளகை நெய்யில் வறுத்து கொள்ளவும், அதை ஒன்றிரண்டாக பொடித்து கொள்ளவும். அதில் வெல்லப்பாகை சேர்த்து உருண்டை தயாரித்து கொள்ளவும். அந்த உருண்டையை தினமும் சாப்பிட்டு வர சளி, இருமல் ஒழியும். குரல் கர கரப்பு நீங்கும்.

ஒரு வயதுக்கு அதிகமான குழந்தைக்கு வெற்றிலை சாற்றில் சிறிது தேன் சேர்த்து தந்தால் ஜலதோசம் ஓடிவிடும். சுக்கு, திப்பிலி, மிளகு எல்லா வற்றையும் சம அளவு எடுத்து பொடி செய்து கொண்டு அதனுடன் அதே அளவு பெருங்காயத்தை எடுத்து பொரித்து பொடி செய்து கலந்து வைத்துக் கொண்டு தினம் சிறிது சாப்பிட்டுவர வாயுத்தொல்லை, அஜீரணம் ஒழியும்.

இடுப்பு வலி தொடர்ந்து பெண்களுக்கு இருந்தால் உளுந்தை வறுத்து பொடி செய்து சர்க்கரை கலந்து தினம் மூன்று நெய் கரண்டி அளவு சாப்பிட்டால் போதும்

துளசி, வெற்றிலை, ஆடாதொடை, கண்டங்கத்திரி, சிற்றரத்தை, தூதுவேளை ஆகி யவற்றின் சாற்றை கசாயமாக்கி கொடுத்தால் கபத்தினால் ஏற்படும் நோய்கள் தீரும்.

லவங்கம், ஓமம் இரண்டையும் பொடிசெய்து அத்துடன் சிறிதளவு கற்பூரத்தையும் சேர்த்து சொத்தையுள்ள பல், வீக்கமுள்ள ஈறுகளின் மீது சில சிட்டிகை எடுத்து அப்பி, பின்னர் பத்து நிமிடம் கழித்து வாயை கொப்பளித்துவிட வேண்டும்.

வசம்பை சுட்டு சாம்பலாக்கி தினந்தோறும் வேளைக்கு ஒரு அரிசி எடையுடன், சிறிது தேன் சேர்த்து மூன்று வேளை தந்தால் கக்குவான் இருமல் சட்டென்று நிற்கும். —