மனம்...
மனங்களைப்
படித்துக்கொண்டிருக்கிறேன்
படித்த புத்தகங்களில்
ஏதும் இல்லை
இவர்கள் முகங்களின்
கிறுக்கல்கள்போல.
முகத்தில் பதியா குணங்களை
அடுக்கி வைத்திருக்கிறார்கள்
கையளவு இதயத்துள்
சேமிப்பறைகளில்
இலக்கமிட்டு.
உலகை மிஞ்சும் எண்ணங்கள்
மனமில்லா உடம்பிற்குள்
எப்படிப் புகும்?
திணித்ததெப்படி ?!