Author Topic: எல்லோருக்கும் ஞானம் கிடைக்குமா? அதை கொடுப்பது யார்?  (Read 1618 times)

Offline Global Angel

எல்லோருக்கும் ஞானம் கிடைக்குமா? அதை கொடுப்பது யார்?


ஆம் இப்புவியில் பல ஆண்டுகள் வாழும் அனைவருக்கும் நிச்சயம் ஞானம் கிடைக்கும்.

இந்த ஞானம் பெற யாரும் எதுவும் செய்ய வேண்டாம். அது கிடைக்க வேண்டிய நேரத்துல தானா கிடைக்கும்.

இந்த ஞானம் பெரும்பாலும் துன்பத்தாலும், துரோகத்தாலும், விரக்தியினாலும், அலுப்பினாலும் ஒரு வித அனுபவத்தாலும் வரும் என்று சொல்லலாம். (இங்கே ஞானம் என்பது ஒரு புரிதலை , படிப்பினையை குறிக்கும். உனக்கெல்லாம் பட்டாதான்டா தெரியும் என்று சொல்வார்களே அதையும் குறிக்கும் ).ஒரே வரியில் சொல்ல வேண்டும் என்றால் ஒரு பெரும் பிரச்சனையை குறிக்கலாம்.
இந்த ஞானத்தை கொடுப்பவன் கேது. யாருக்கு எதனால் ஞானம் வரும் என்பதை ஓரளவுக்கு கணிக்க முடியும்.

ஞான காரகன் கேது எந்த வீட்டில் இருக்கின்றானோ அந்த வீட்டை பொறுத்துதான் பெரும்பாலும் அவனுக்கு ஞானம் கிடைக்கும். அவன் இருக்கும் வீடு சம்பந்தமாகவே பெரும்பாலும் ஞானம் கிடைக்கும். ஆம் ஒன்று முதல் பண்ணிரண்டு வரை அவன் எங்கே இருந்தாலும் ஞானத்தை அளிப்பான். ஒரு வீடு எது எதைக்குறிக்கிறதோ அதில் ஒன்றின் மூலமாக இந்த ஞானம் வரும்)


உதாரணத்திற்கு ஒருவனுக்கு இரண்டில் கேது எனில் அவனுக்கு குடும்பத்தின் மூலமாக ஞானம் கிடைக்கலாம்(சிலருக்கு அளவுக்கு அதிகமாக குடும்பம் பெருகி வரும்- சிலருக்கு குடுபமே இல்லாமல் போய் ஞானம் வரும்), செல்வத்தின் மூலமாக கிடைக்கலாம். ஏழில் கேது எனில் திருமணம் மூலம் -திருமணம் ஆனபின்பு துணையினால் - அல்லது நண்பர்களினால். இப்படி அந்த வீட்டில் சம்பந்தப்பட்ட எதன் மூலமாக வேண்டுமானாலும் ஞான காரகன் கேது ஞானத்தை கொடுப்பான்.



                    

Offline RemO

anjel ithu aanmigam section la pota sariyaa irukkum nu enaku thonuthu

Offline spince

parava illiyea josiyam kooda therinchu irukku ammani ku ..!!
yemni yemni neakku ippo antha payapulla yenguttu nikiraan nu koncham sollungalen parpom.. ;) :P