Author Topic: இறால் பீன்ஸ் மசாலா  (Read 499 times)

Offline kanmani

இறால் பீன்ஸ் மசாலா
« on: January 22, 2014, 11:38:52 PM »
5
    நறுக்கிய பீன்ஸ் - 2 கப்
    பெரிய வெங்காயம் - ஒன்று
    மிளகாய் வற்றல் - 2
    சோம்பு - ஒரு தேக்கரண்டி
    தேங்காய் துருவல் - கால் கப்
    உப்பு - ஒரு தேக்கரண்டி
    மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
    கறிவேப்பிலை - ஒரு கொத்து
    கடுகு - அரை தேக்கரண்டி
    எண்ணெய் - கால் கப்

 

பீன்ஸை நீளவாக்கில் சிறு சிறுத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பெரிய வெங்காயத்தை தோல் உரித்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இறாலை சுத்தம் செய்து கழுவி எடுத்துக் கொள்ளவும். தேங்காயை துருவிக் கொள்ளவும்.

மிக்ஸியில் நறுக்கின வெங்காயம், மிளகாய் வற்றல், தேங்காய் துருவல், இறால், சோம்பு, உப்பு, மஞ்சள் தூள் ஆகியவற்றை போட்டு தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

ஒரு அகலமான பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளிக்கவும். கடுகு வெடித்ததும் கறிவேப்பிலை போடவும்.

அதன் பிறகு கறிவேப்பிலை போட்டு 15 நொடி கழித்து அதில் அரைத்து வைத்திருக்கும் விழுதை போட்டு 2 நிமிடம் வதக்கவும்.

விழுது நன்கு வதங்கியதும் அதில் நறுக்கி வைத்திருக்கும் பீன்ஸை போட்டு பிரட்டி விடவும்.

பீன்ஸ் உடன் மசாலா நன்கு ஒன்றாக சேரும்படி 2 நிமிடம் பிரட்டி விடவும். கை விடாமல் பிரட்டிக் கொண்டே இருக்கவும்.

2 நிமிடம் கழித்து 2 மேசைக்கரண்டி தண்ணீர் தெளித்து பிரட்டி விட்டு ஒரு தட்டை வைத்து 3 நிமிடம் மூடி வைக்கவும்.

பிறகு திறந்து பீன்ஸ் வெந்ததும் ஒரு முறை நன்கு கிளறி விட்டு அடுப்பில் இருந்து இறக்கி விடவும்.

ருசியான இறால் பீன்ஸ் மசாலா தயார். இறாலை மிக்ஸியில் போட்டு அரைக்காமல் பீன்ஸ் உடன் போட்டு வதக்கியும் செய்யலாம்.