இஞ்சி துண்டுகள் - ஒரு மேசைக்கரண்டி
சிவப்பு மிளகாய் - 7 - 9
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை - ஒரு கப்
கொத்தமல்லித் தழை - ஒரு கப்
புதினா - ஒன்றரை கப்
பெரிய வெங்காயம் - 3
பூண்டு - 6 பல்
உப்பு - ருசிக்கேற்ப
தாளிக்க:
எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
கடுகு, உளுத்தம்பருப்பு - ஒரு தேக்கரண்டி
பெருங்காயப் பவுடர் - அரை தேக்கரண்டி
தேவையான பொருட்களைத் தயாராக எடுத்து வைக்கவும்.
பெரிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை நறுக்கிக் கொள்ளவும். பூண்டு பற்களை தோலுரித்து நறுக்கி வைக்கவும். இஞ்சியை தோல் சீவி, சிறிய துண்டுகளாக நறுக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி, சிவப்பு மிளகாயை வறுக்கவும். பிறகு, இஞ்சி, பச்சை மிளகாய், வெங்காயம், பூண்டு ஆகியவற்றையும் எண்ணெய் ஊற்றி வதக்கவும். அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து மிக்ஸியில் போட்டு ஆறவிடவும்.
ஆறியதும் உப்பு சேர்த்து அரைக்கவும். தண்ணீர் ஊற்ற வேண்டாம். வெங்காயத்தில் இருக்கும் தண்ணீர்ப் பதமே போதுமானது.
புதினா மற்றும் கொத்தமல்லித் தழையை சுத்தம் செய்து, பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கறிவேப்பிலையையும் சுத்தம் செய்து கொள்ளவும். வாணலியில் மீண்டும் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி, கொத்தமல்லித் தழை, புதினா மற்றும் கறிவேப்பிலையை வதக்கி ஆறவைக்கவும். ஆறியதும் மிக்ஸியிலிருக்கும் விழுதுடன், இவற்றையும் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, பெருங்காயப் பவுடரையும் சேர்த்து பொரியவிடவும். தாளித்தவற்றைத் துவையலுடன் சேர்த்து அரைத்தெடுக்கவும்.
சுவையான இஞ்சி புதினா மல்லித் துவையல் தயார்.
இந்தத் துவையலை சுடு சாதத்துடன் நெய் சேர்த்து, லஞ்ச் பாக்ஸுக்கு தயார் செய்யலாம். தயிர் சாதம், இட்லி, தோசை, சப்பாத்தி என்று எல்லாவற்றுக்கும் பொருத்தமான சைட் டிஷ். ஃப்ரிஜ்ஜில் வைத்து, ஒரு வாரம் வரை உபயோகிக்கலாம்.