Author Topic: ~ சில வகை கீரைகளின் மருத்துவ குணங்கள்:- ~  (Read 792 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 227447
  • Total likes: 29057
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
சில வகை கீரைகளின் மருத்துவ குணங்கள்:-




அகத்திக்கீரை:

அகத்திக்கீரை ஜீரண சக்தியைத்தரும். மலச்சிக்கலைப் போக்கும். அரிசி களைந்த தண்ணீரில் சின்ன வெங்காயம், சீரகப்பொடி, தேவையான அளவு உப்புடன் அகத்திக் கீரையை சேர்த்து வேக வைத்துச் சாப்பிடலாம். அகத்திக்கீரையுடன் தேவையான அளவு உப்பு, வர மிளகாய், அரிந்த வெங்காயம் சேர்த்து பொரியல் செய்தும் சாப்பிடலாம்.

அரைக்கீரை:

புரதம், கால்சியம், இரும்புச்சத்து நிறைந்த கீரை அரைக்கீரையாகும். காய்ச்சலால் எற்படும் உடல் நடுக்கம், கபரோகம், வாதநோய் ஆகிய நோய்களை அரைக்கீரை சரி செய்கிறது. ரத்தத்தை விருத்தி செய்து சோர்வைப்போக்கி உடல்நலத்தை சீராக்கும். தாது விருத்தியைத் தந்து உடலின் சக்தியைப் பெருக்கும் ஆற்றலும் இதற்கு உண்டு.

சிறுகீரை:

இக்கீரையை பருப்புடன் சேர்த்துக் கடைந்து சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம். பெரிய பெரிய நோய்கள் எல்லாம் சொல்லாமல் கொள்ளாமல் விலகும். காச நோய் குணமாகும். நீர்க்கடுப்பு, வீக்கம், பித்தநோய் சரியாகும். பெண்களின் மேனி எழிலுக்கு ஒரு வரப்பிரசாதம் இக்கீரை. உடல் நலிவுக்கு மருந்து சாப்பிடும்போது மட்டும் சிறுகீரை சாப்பிடுவதை கண்டிப்பாக தவிர்த்து விட வேண்டும்.

தூதுவளைக்கீரை:

தூதுவளை இலை முட்களுடன் இருக்கும். அவைகளில் உள்ள முட்களை நீக்கி உபயோகிக்க வேண்டும். இதைப்பச்சடியில் சேர்க்கலாம். கூட்டாகவும் வைக்கலாம். துவையல் செய்தும் சாப்பிடலாம். விந்து நஷ்டம், மேலிழைப்பு, காசநோய், காதுமந்தம் ஆகியவற்றுக்கு தூதுவளை கை கண்ட மருந்து.

புதினாக்கீரை:

சிறுநீரகங்களை பலப்படுத்தக்கூடிய கீரை புதினாக்கீரை. புதினாக்கீரையை துவையலாக அரைத்து சாதத்துடன் சேர்த்து சாப்பிட, பசி எடுத்து சாதம் அதிக அளவில் உள்ளே போகும்.

புளிச்சகீரை:

நுரையீரலை வலுப்படுத்தி சுவாசத்தை சீர் செய்யும் கீரை புளிச்சகீரை. புளிப்பு ருசியுடைய இந்தக்கீரைக்கு சுக்காங் கீரை என்ற பெயரும் உண்டு. தேகத்திற்கு மிக்க வலுவைத் தரும். போகத்தில் நாட்டத்தை ஏற்படுத்தும். தீராத பித்தத்தை போக்கும். ரத்த பேதியை சரி செய்யும். பெண்களுக்கு வரும் மார்புப் புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றல் இந்த புளிச்ச கீரைக்கு உண்டு.

பொன்னாங்கண்ணிக் கீரை:

உணவுடன் சேர்த்து சாப்பிட்டுவர, கண்களைப்பற்றிய ரோகம் நீங்கும். உஷ்ணமண்டல ரோகம், தேகச்சூடு, மூலரோகம் போகும்.

மணத்தக்காளிக்கீரை:

நாவில் உள்ள புண் நீங்கும். உடலின் உள்ளுறுப்புக்களை பலப்படுத்தும் சக்தி இந்தக்கீரைக்கு உண்டு.

முருங்கைக்கீரை:

அக்கினி மந்தம், உட்சூடு, கண்தோஷம் யாவும் நீங்கும். உடல் சூட்டை தணித்து சமப்படுத்தும். பித்த சம்பந்தமான வியாதிகளைக் குணமாக்கும். உடலுக்கு நல்ல பலம் தரும். தாய்ப்பாலை சுரப்பிக்கும். தாதுவை விருத்தி செய்யும்.

முளைக்கீரை:

ரத்த அழுத்த நோய்க்கு முளைக்கீரை சாப்பிடுவது நல்லது.

முடக்கத்தான் கீரை:

இருமலுக்கு அருமருந்து. வல்லாரைக்கீரை மூளைத் திறனைப் பெருக்கும். ஞாபக சக்தியை அதிகரிக்கும். குடல் புண், வாய்ப்புண், வாய் நாற்றம் போக்கும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 227447
  • Total likes: 29057
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
சில வகை கீரைகளின் மருத்துவ குணங்கள்:-




முளைக்கீரை:

அதிக ருசியும், பசியும் கொடுக்கக் கூடியது. மலச்சிக்கலைப் போக்கும். உடல் சூட்டைத் தணிக்கும். உடலுக்கு வலுவேற்றி புத்துணர்வைத் தரும்.



தண்டுக்கீரை:

முளைக்கீரையின் முற்றியதே தண்டுக் கீரையாகும். இதில் இலை தண்டு இரண்டுமே உணவாகப் பயன்படுகிறது. இரத்தத்தை சுத்தப்படுத்தும். இதயத்திற்கு உகந்த கீரை. மலத்தை இளக்கும். இரத்தக் கொதிப்பு, இரத்த பேதியை கட்டுப்படுத்தும். வயிற்றுக் கடுப்பு, நீர்ச்சுருக்கை போக்கும் குணமுண்டு.



சிறுகீரை:

இதுவும் தண்டுக்கீரை இனத்தைச் சார்ந்ததுதான். கண் சம்பந்தப்பட்ட அனைத்து வியாதிகளுக்கும் இது நல்ல மருந்தாகும். இருமலைப் போக்கும். நல்ல குரல்வளத்தைக் கொடுக்கும். வயிற்றுப் புண், வாய்ப்புண்ணை நீக்கும். மூல நோயாளிகளுக்கு சிறந்த மருந்தாகும். சொறி, சிரங்கு போன்ற தோல் சம்பந்தப்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது சிறந்த மருந்து.



பசலைக் கீரை:

இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் குணமுண்டு. சிறுநீரகம் சம்பந்தப்பட்ட நோய்களைக் குணமாக்கும். நீர்கடுப்பு, நீர் எரிச்சல், நீர்ச்சுருக்கு போன்றவற்றைப் போக்கும். பித்தத்தைக் கட்டுப்படுத்தும். ஈரலை வலுவூட்டும்.



கொடிப்பசலை:

சிகப்பு, வெள்ளை என இருவகை உள்ளது. இரத்தக் கொதிப்பை அடக்கும். உடல் சூட்டைத் தணிக்கும். சிறுநீரை அதிகம் வெளியேற்றச் செய்யும். மலச்சிக்கலைப் போக்கும். தாதுவை விருத்தி செய்யும்.

இதன் இலைச்சாற்றை 1 ஸ்பூன் எடுத்து அதனுடன் பனங்கற்கண்டு கலந்து குழந்தைகளுக்குக் கொடுத்து வந்தால் சளித்தொல்லை நெருங்காது.

இதன் இலையை நீரில் போட்டு அலசினால் குழகுழப்புடன் ஒரு விதமான பசை வெளிப்படும். அதனைத் தலையில் பூச தீராத தலைவலி நீங்கும். நல்ல தூக்கத்தைக் கொடுக்கும்.



புளிச்ச கீரை:

அதிக புளிப்புச்சுவை கொண்டது. ஆந்திர மக்கள் அதிகம் பயன்படுத்துவார்கள். மலச்சிக்கலைப் போக்கும். குடல் புண்ணை ஆற்றும். அஜீரணக் கோளாறுகளை நீக்கும்.



பண்ணைக் கீரை:

துவர்ப்பும் இனிப்பும் கலந்த சுவையுடையது. வயிற்றுப்புண், குடல்புண், வாய்ப்புண், தொண்டைப்புண்ணை ஆற்றும். மலத்தை இளக்கி மலச்சிக்கலைப் போக்கும். கரப்பான், கிரந்திப் புண் இவற்றை குணப்படுத்தும். வறட்டு இருமலைப் போக்கும்.



புளியாரை:

புளிப்பு சுவையுடையது. நன்கு பசியைத் தூண்டும். மூலம், இரத்த மூலம், அஜீரண கோளாறுகளை குணப்படுத்தும். இதன் இலையை அரைத்து பரு, கொப்புளம், கட்டிகளின்மீது பூசினால் விரைவில் குணமாகும்.

பருப்புக்கீரை:

இனிப்பும், புளிப்பும் கலந்த சுவையுடையது. இரத்தத்தின் சூட்டைத் தணிக்கும். சிறுநீரைப் பெருக்கக்கூடியது. குடல் புண்ணை ஆற்றும். சீதபேதி, இரத்த பேதி, கல்லீரல் நோயாளிகளுக்கு சிறந்த மருந்தாகும். இதன் இலையையும், விதையையும் அரைத்து தீக்காயங்களின் மீது தடவ புண்கள் விரைவில் ஆறும். இதன் இலையை அரைத்து கைகால் எரிச்சல் உள்ள இடங்களில் தடவினால் எரிச்சல் குணமாகும்.



புதினாக் கீரை:

நறுமணத்திற்கு மட்டும் உணவில் சேர்க்கிறோம் என்று நினைப்பீர்கள். ஆனால் இது அளப்பரிய குணங்களைக் கொண்டது. வாயுத் தொல்லையிலிருந்து விடுபட இதுவே சிறந்த கீரையாகும். உடல் வலியைப் போக்கும். ஜீரணச் சக்தியைத் தூண்டும்.

இதனை உலர்த்தி கஷாயமாக்கிக் குடித்தால் காமாலை, விக்கல், வயிற்றுவலி, குமட்டல், தலைவலி, சூதக வலி போன்றவை குணமாகும். இதன் பொடியை கொண்டு பல்துலக்கினால் வாய்ப்புண் ஆறும். வாய் மணக்கும்.



துத்திக் கீரை:

இதனைப் பருப்புடன் சேர்த்து வதக்கி சாப்பிட்டால் மூலவாயு தணியும். மலத்தை இளக்கி உட்புண்ணை ஆற்றும். சிறுநீரைப் பெருக்கும்