Author Topic: எங்கும் எந்த அடையாளமும் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை  (Read 1106 times)

Offline Global Angel


எங்கும் எந்த அடையாளமும் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை
கொலையாளியின் கரத்திலோ சட்டைக் கையிலோ
 
எங்குமே
 
சிந்திய குருதியின் அடையாளம்
 
என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை
 
செவ்விதழ் கொண்ட குத்தீட்டிகளையோ
 
சிவப்பு நுனி வாட்களையோ
 
கண்டுபிடிக்க இயலவில்லை
 
தூசியில் பொழிவுகளோ
 
சுவர்களில் கறைகளோ
 
இல்லை,
 
எங்குமே, எங்குமே
 
இரத்தம்
 
தன் இருளினைத் திரை விலக்கவில்லை.
 
பெருமிதத்தில் பிளவாகவோ
 
சடங்கில் பலியாகவோ அல்ல,
 
அது
 
போர்க்களத்தில் சிந்திடவில்லை.
 
ஒரு தியாகியின் விளம்பரப் பட்டிகையை
 
அது உயர்த்தவில்லை.
 
அந்த அனாதை இரத்தம்
 
பெருங்குரலில் அலறியபடி
 
ஓடிக் கொண்டே இருந்தது.
 
ஒருவருக்குமே நேரமோ
 
வண்ணமோ இல்லை,
 
செவியுற எவரும் சிரத்தை கொள்ளவில்லை.
 
சாட்சியில்லை, தற்காப்பில்லை
 
வழக்கு முடிக்கப்பட்டுவிட்டது.
 
ஒடுக்கப்பட்டோரின் இரத்தம்
 
ஊமையாகத்
 
தூசியினுள் இறங்கியது.

 
 
 
- ஃபைஸ் அகமது ஃபைஸ், பாகிஸ்தான்
                    

Offline RemO


Offline Global Angel

                    

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 118
  • Total likes: 118
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
ஒடுக்கப்பட்டோரின் இரத்தம்
 
ஊமையாகத்
 
தூசியினுள் இறங்கியது.


 :'( :'( :'( :'( nice one


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline Global Angel