எளிய இயற்கை மருத்துவம்:-

* கொத்தமல்லித் தழை நிறைய கிடைக்கும் காலங்களில் தயிர் பச்சடியாய் தினமும் சாப்பிட்டால், கண் பார்வை தெளிவடையும்.
* சப்பாத்திக்கள்ளி பூவை கழுவி சுத்தம் செய்து விழுதாக அரைக்க வேண்டும். அந்த விழுதை கட்டியின் நிலைக்கேற்ப தொடர்ந்து கட்டி வந்தால் கட்டி உடைந்து ரணம் தானாக ஆறிவிடும்.
* கீழாநெல்லி இலைகளைக் கொண்டு வந்து தண்ணீர்விட்டு, அடுப்பில் வைத்துக் காய்ச்சி, கசாயம் இறக்கி அந்த கசாயத்தை ஒரு சிறிய டம்ளரில் அரை டம்ளர் வீதம் எடுத்து, ஒரு நாளைக்கு மூன்று வேளை வீதம் மூன்றுநாள் சாப்பிட்டு வந்தால் சீதபேதி குணமாகும்.
* குப்பைமேனி இலைகளை உப்புடன் சேர்த்து அரைத்து சொறி, சிரங்குகள் இருக்கும் இடத்தில் தேய்த்துக் குளித்தால் சொறி, சிரங்குகள் நீங்கும்.
* மல்லிகைப்பூவை அரைத்து வீக்கமுள்ள இடங்களில் தடவிவர வீக்கம் குறைந்து குணமாகும். சொறி, சிரங்கு, நமைச்சலும் இதை தடவிவர போகும்.
* கண் நோயினால் அவதிப்படும் போது புளியம் பூவை அரைத்து கண்களைச் சுற்றி பற்றுப் போடவும். கண் சிவப்பு, கண்வலி நீங்கி குணமாகும்.
* ரோஜா மொட்டை துவையலாக அரைத்துச் சாப்பிட்டால் அஜீரணம், வயிற்றுவலி முதலிய வெப்ப நோய்கள் நீங்கும். சீதபேதி குணமாகும்.
* சிறுநீர் போகும்போது கடுகடுப்பு, எரிச்சல் முதலியவைகளினால் அவதிப்படுகிறவர்கள் செம்பருத்திப்பூ ஐந்து, செம்பருத்தி இலை ஐம்பது கிராம் எடுத்து ஒரு லிட்டர் நீரிலிட்டு, கால் லிட்டராக வற்றவைத்து வடிகட்டி பாட்டிலில் பத்திரப்படுத்தவும். காலை மாலை இரண்டு அவுன்ஸ் பருகிவர, சிறுநீர் எரிச்சல் கடுகடுப்பு நீங்கும்.
* வாழைப்பூவை பருப்புடன் சேர்த்து சமையல் செய்து சாப்பிட, ஆசனக் கடுப்பு நீங்கும், ரத்த மூலமும், இருமலும் நின்று போகும்.