கற்பனை சந்தோஷம்..
அன்பே!!
உன்னை நினைத்து
நிறைய
எழுதி வருகிறேன்
எல்லாவற்றிலும்
நீ அன்பாய்
இருப்பது போலதான்...
கற்பனையில் எல்லாம்
நிறைய அன்பு கிடைக்கிறது
உன்னிடமிருந்து....
அப்போது எல்லாம்
ஆனந்த கண்ணீர்
என்னிடம்....
பாசத்துக்கு ஏங்கும்
பறவையாய்
உன்னை சுற்றி
என் மனம்....
கற்பனையில் சந்தோஷம்..
வெறும் கற்பனையாகவே
முடிவதை தாங்க முடிவது
இல்லை...
எல்லோருக்கும் சந்தோஷம்
அவர்களுக்கு கிடைக்கும்
வாழ்க்கையில்தானாம்.....
எனக்கும் வேண்டும்
சந்தோஷமான வாழ்க்கை
அது வேறு வாழ்க்கை அல்ல....
உன்னோடு மட்டுமே
உண்டாகும்
சந்தோஷ வாழ்க்கை......
அதுவரை
என் கற்பனை
சந்தோஷம் தொடரும்......