Author Topic: முத்தத் துளிகள்  (Read 510 times)

Offline Maran

முத்தத் துளிகள்
« on: October 08, 2013, 11:48:32 AM »


தேன் முத்தம்
தரும்
திருடன்
உன்னைத் தின்ன
என்னோடு
காத்திருக்கிறது
தேன் களவு கொடுத்த
வண்ணத்துப்பூச்சியுமொன்று !




ஒரு கன்னம் நிறைத்(ந்)தால்
மறு கன்னமும் காட்டு
சொல்லி வைத்தார்
சிலுவைச்சாமி
சரி சரி....
மறு கன்னத்தையும்
நிறைத்திவிடு
இது காதலர் தினம் !




இன்றெல்லாம்
சொன்ன உன் வார்த்தைகளை
கோர்த்துக்கொண்டிருக்கிறேன்
போதவில்லை கவிதையாக்க....
உன் வெடிச்சிரிப்ப்பும்
போதாது....
ராத்திரி
மு...த்...த...ம் தர
விடியகாலை...
முழுக்கவிதையாகிவிடும்
பாரேன் !




நீ.....
தராத முத்தத்தால்
நிரவாமல் கிடக்கிறது
கன்னக்குழிகள்
என்.........
முழுமையடையாக்
கவிதைபோல !



- Anonymous
« Last Edit: October 08, 2013, 11:54:48 AM by Maran »

Offline Thavi

  • Sr. Member
  • *
  • Posts: 383
  • Total likes: 24
  • Total likes: 24
  • Karma: +0/-0
  • உயிர் பிரிந்தாலும் உன்னை பிரியாத வரம் வேண்டும்
Re: முத்தத் துளிகள்
« Reply #1 on: October 12, 2013, 12:38:12 AM »
kalakuringa machio thodarnthu elutha vaalthugal
நான் நேசிக்கும் நண்பர்கள் என்னை மறந்தாலும் என்னை நேசித்த நண்பர்களை நான் மறப்பதில்லை..