Author Topic: மீன் பிரியாணி  (Read 453 times)

Offline kanmani

மீன் பிரியாணி
« on: October 08, 2013, 10:43:07 AM »
மீன் பிரியாணி

தேவையான பொருட்கள் மீன் - 1/4 கிலோ அரிசி - 2 ஆழாக்கு வெங்காயம் - 150 கிராம் தக்காளி - 150 கிராம் பச்சை மிளகாய் - 2 இஞ்சி, பூண்டு விழுது - 2 டீஸ்பூன் புதினா, கொத்தமல்லி இலை - 1/4 கட்டு மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன் தனியாத்தூள் - 1 டீஸ்பூன் மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன் தயிர் - 1 கப் உப்பு - தேவையான அளவு எண்ணை - 1/2 குழிக் கர�டி

செய்முறை

* மீனை சுத்தம் செய்து துண்டுகளாக்கவும்,
* வெங்காயம், தக்காளியை பொடியாக நீளவாக்கில் நறுக்கவும். மிளகாயைக் கீறிக் கொள்ளவும்.
* ஒரு அகலமான பாத்திரம் அல்லது குக்கரில் எண்ணை ஊற்றி காய்ந்ததும் பட்டை, லவங்கம் சேர்த்துத் தாளிக்கவும்.
* வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுது, தக்காளி, புதினா, கொத்தமல்லி இலை இவற்றை ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து வதக்கவும்.
* தயிர் மற்றும் போதுமான அளவு உப்பு சேர்த்து மீனை வதக்கவும். தொடர்ந்து மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள் தூள் சேர்க்கவும்.
* பாசுமதி அரிசி ஒன்றரை பங்கும், சாதா அரிசி 2 பங்கும் சேர்த்து வேக வைக்கவும். பாத்திரத்தில் `தம்` சேர்த்து (ஆவி போகாமல் மூடிவைத்து) சிறிது நேரத்தில் இறக்கவும்.
* குக்கரில் ஒரு விசில் வந்ததும், குறைந்த தீயில் வைத்திருந்து அடுப்பை அணைத்து விடவும்.
* சுவையான மீன் பிரியாணி மணமணக்க ரெடி.