புழுங்கலரிசி - 1/4 கப்
பாசிப்பயறு - 2 தேக்கரண்டி
வெந்தயம் - 1 தேக்கரண்டி
சின்ன வெங்காயம் - 5 - 6
வெள்ளைப் பூண்டு - 2
மோர் - 1 - 1.5 கப்
உப்பு - தேவையான அளவு
வெங்காயம், பூடு இரண்டையும் தோலுரித்து, பொடியாக நறுக்கவும்.
பாசிப்பயறையும் வெந்தயத்தையும் முதல் நாள் இரவே ஊற வைக்கவும்.
காலையில் புழுங்கலரிசியை களைந்து, அத்துடன் ஊற வைத்த வெந்தயம், பாசிப்பயறு, நறுக்கிய வெங்காயம், பூடு, எல்லாவற்றையும் சேர்த்து, 2 கப் தண்ணீர் ஊற்றி, குக்கரில் 4-5 விசில் வர விடவும்.
விசில் அடங்கியதும், குக்கரைத் திறந்து, குழைவாக வெந்திருக்கும் கஞ்சியை, நன்றாக மசிக்கவும்.
ஆறியதும், உப்பும் மோரும் கலந்து, பருகக் கொடுக்கவும்.
Note:
தொடர்ந்த வயிற்று வலி, அல்சர் இருப்பவர்களுக்கு, இந்தக் கஞ்சி மிகச் சிறப்பான உணவாகும். காலையில் டிஃபனுக்கு பதிலாக, இந்தக் கஞ்சியைக் குடிக்க வேண்டும். தொடர்ந்து 15 நாட்களுக்குக் குடித்தால், வயிற்று வலி, புண் குணமாகும்.