Author Topic: பத்தியக் கஞ்சி  (Read 431 times)

Offline kanmani

பத்தியக் கஞ்சி
« on: October 08, 2013, 08:43:16 AM »

    புழுங்கலரிசி - 1/4 கப்
    பாசிப்பயறு - 2 தேக்கரண்டி
    வெந்தயம் - 1 தேக்கரண்டி
    சின்ன வெங்காயம் - 5 - 6
    வெள்ளைப் பூண்டு - 2
    மோர் - 1 - 1.5 கப்
    உப்பு - தேவையான அளவு

 

    வெங்காயம், பூடு இரண்டையும் தோலுரித்து, பொடியாக நறுக்கவும்.
    பாசிப்பயறையும் வெந்தயத்தையும் முதல் நாள் இரவே ஊற வைக்கவும்.
    காலையில் புழுங்கலரிசியை களைந்து, அத்துடன் ஊற வைத்த வெந்தயம், பாசிப்பயறு, நறுக்கிய வெங்காயம், பூடு, எல்லாவற்றையும் சேர்த்து, 2 கப் தண்ணீர் ஊற்றி, குக்கரில் 4-5 விசில் வர விடவும்.
    விசில் அடங்கியதும், குக்கரைத் திறந்து, குழைவாக வெந்திருக்கும் கஞ்சியை, நன்றாக மசிக்கவும்.
    ஆறியதும், உப்பும் மோரும் கலந்து, பருகக் கொடுக்கவும்.

Note:

தொடர்ந்த வயிற்று வலி, அல்சர் இருப்பவர்களுக்கு, இந்தக் கஞ்சி மிகச் சிறப்பான உணவாகும். காலையில் டிஃபனுக்கு பதிலாக, இந்தக் கஞ்சியைக் குடிக்க வேண்டும். தொடர்ந்து 15 நாட்களுக்குக் குடித்தால், வயிற்று வலி, புண் குணமாகும்.