முட்கள் சூழ்ந்த அழகிய ரோஜா போல்
உன் காதல் இதயத்தை முல்வேலிக்குள்
எதற்கு ஒளித்து வைத்தாய்??
யாரும் களவாட கூடாது என்பதற்கா??
வேலி கொண்டு பாதுகாக்கும் உன்
இதயம் என்னும் புதையலை
களவாட
40 திருடர்கள் வேண்டாம்
அலிபாபா நான் ஒருவன் போதுமடி
திருடிய உன் உள்ளத்தை
என் காதல் என்னும் கூண்டில்
சிறைவைப்பேன்
கலங்காதே பெண்ணே
அட்சிறையில் உனக்கு
தாயாய் ,
தந்தையாய்,
தோழனாய்,
உன்னுடன் கொஞ்சி சண்டை போடும்
செல்ல எதிரியாய்
நான் இருப்பேனடி...
ஆதலால்
பூட்டிய புதையலை
களவாட அனுமதி
கண்ணே.........