Author Topic: ~ சாமை நொய் காஞ்சிபுரம் இட்லி ~  (Read 540 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226481
  • Total likes: 28908
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
சாமை நொய் காஞ்சிபுரம் இட்லி



தேவையானவை:
சாமை நொய், குண்டு உளுத்தம் பருப்பு - தலா 200 கிராம்
கருப்பு உடைத்த உளுத்தம் பருப்பு -
2 டீஸ்பூன் (ஊறவிட்டது)
சுக்குப்பொடி - ஒரு சிட்டிகை
மிளகு, சீரகம், பெருங்காயம், உப்பு - தேவைக்கேற்ப
நெய் எண்ணெய் சேர்ந்து - 100 கிராம்

செய்முறை:
முதல் நாள் மாலையில் குண்டு உளுத்தம் பருப்பை ஒரு மணி நேரம் ஊறவிட்டு, கொரகொரப்பாக அரைக்கவும். இதனுடன் உப்பு, சாமை நொய், சுக்குப்பொடி, பெருங்காயம், ஊறிய கருப்பு உளுத்தம் பருப்பு சேர்த்து, கெட்டியாக அரைத்து கரைத்து வைக்கவும். மறுநாள் காலை நெய் மற்றும் எண்ணெயைக் காய்ச்சி, அதில் மிளகு, சீரகத்தைப் பொரியவிட்டு மாவில் கொட்டி கலந்து, எண்ணெய் பூசிய உயரமான பாத்திரத்தில் முக்கால் பாகம் வரை கொட்டி, குக்கரில் வைத்து, வெயிட் இல்லாது வேகவிட்டு எடுக்கவும். இது வேக அரை மணி ஆகும். ஆறிய பின் கவிழ்த்து, துண்டுகளாக்கி இட்லி மிளகாய்ப் பொடியுடன் பரிமாறவும். சாமை காஞ்சி இட்லி, வழக்கமான காஞ்சிபுரம் இட்லி போல் கனமாக இருக்காது. லேசாகத்தான் இருக்கும். ருசி அபாரமாக இருக்கும்.