பாசிப்பருப்பு -1கப்
வெங்காயம் -1
காய்ந்தமிளகாய் -1
கறிவேப்பிலை -1கொத்து
சோம்பு -1/2 ஸ்பூன்
உப்பு -தேவையான அளவு
பெருங்காயதூள் -1சிட்டிகை
எண்ணை - பொரிப்பதற்கு
பருப்பை 2மணி நேரம் ஊறவைக்கவும்.
வெங்காயம்,கறிவேப்பிலை பொடியாக நறுக்கிவைக்கவும்.
பருப்புடன் சோம்பு,மிளகாய் உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.
நறுக்கியவெங்காயம்,கறிவேப்பிலை,பெருங்காயபொடி போட்டு நன்கு பிசையவும்.
வாணலியில் எண்ணை ஊற்றி சுடவைத்து மாவை பக்கோடாவாக போட்டு சுட்டு எடுக்கவும்.