ஆசையாய் பால் காய்ச்சி
அழகாய் குடி போனோம்...
பார்த்து பார்த்து பக்குவமாய்
கட்டி இருந்த வீடு.....
அழகாய் புகைப்படங்கள்
அற்புதமான ஓவியங்கள்
எல்லாம் இப்போது
பரனையில்....
மனம் பாரமாய் போனது......
என் குழந்தை...
மழலை குறும்பு செய்தால்
ரசிப்பேன் அன்று...
இன்று எப்போதும் ஒரு கண் அவள் மீது
சுவற்றில் கிறுக்கி விடுவாளோ என்று......
புரியாத மழலை...
புரிந்த நான் அடிக்கும் நிலை.....
நிம்மதியாய் தூங்காதது போன்ற
ஒரு ஏக்கம்....
நடுத்தர குடும்பம் என்றால்
நாங்கள் நடுததெருவில் தானோ.....
காவல்காரன் முதல்
எல்லோருக்கும் பயந்த நிலை......
என்று தான் எங்களுக்கு விடிவு காலம்..
ஆடம்பராமாய் வீடு இல்லை என்றாலும்
அமைதியாய் ஒரு வீடு
நான் ராணியாய்..
என் மகள் இளவரசியாய்.....
சொந்தமாய் ஒரு வீடு....
வாடகை கொடுத்தும்
கொடுக்காத நிம்மதி...
என்றும் நிரந்தரமாய் வேண்டும்....
என் வீட்டில்...