Author Topic: மோர் வில்லை  (Read 448 times)

Offline kanmani

மோர் வில்லை
« on: August 24, 2013, 02:04:41 PM »

    புழுங்கல் அரிசி - 150 மில்லி
    பச்சரிசி - 150 மில்லி
    பச்சை மிளகாய் - 4
    இஞ்சி - அரை இஞ்ச்
    உப்பு - தேவையான அளவு
    புளித்த மோர் - 150 மில்லி
    ஊறவைத்த கடலைப்பருப்பு - 2 மேசைக்கரண்டி
    எண்ணெய் - 50 மில்லி
    தேங்காய் - அரை மூடி

 

    தேங்காயை துருவிக் கொள்ளவும்.
    மிக்ஸி அல்லது கிரைண்டரில் மேலே உள்ள 2 அரிசியையும் ஒன்றாக ஊற வைத்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.
    அரைக்கும் போதே பச்சை மிளகாய், இஞ்சி, உப்பு, தேங்காய் போட்டுக் கொள்ளவும்.
    பின் அரைத்ததை மோரில் சேர்த்து, இட்லி மாவைவிட சிறிது நீர்க்க கரைத்துக் கொள்ளவும்.
    பிறகு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, கறிவேப்பிலை போட்டு வெடித்ததும் ஊறவைத்த கடலைப்பருப்பை நீர் இல்லாமல் வடித்து, அதில் போடவும்.
    பின் ஒரு நிமிடம் கழித்து மிதமான சூட்டில் இருக்க வேண்டும். கை விடாமல் கிளறவும்.
    15 நிமிடத்தில் வெந்து விடும். ஒரு வேட்டியை நனைத்துப் பிழிந்து விரித்துக் கொள்ள வேண்டும்.
    இந்த மாவு வெந்ததும் இறக்கி வைத்து ஒரு கிண்ணத்தில் தண்ணீரை வைத்து தொட்டுக் தொட்டு சிறு சிறு அப்பளம் போல் சிறிது தடுமனாக தட்டி வைக்கவும்.
    5 நிமிடம் கழித்து ஒரு தட்டில் எடுத்து வைக்கலாம்.