தேவையான பொருட்கள்:
கொண்டைக்கடலை - 1 கப்
பன்னீர் - 250 கிராம் (துருவியது அல்லது நறுக்கியது)
வெங்காயம் - 2 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
தக்காளி - 2 (நறுக்கியது)
மல்லி தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
மிளகு தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மாங்காய் தூள் - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் - 1 கப்
கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது)
செய்முறை:
கொண்டைக்கடலையை நீரில் போட்டு 5 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். 5 மணிநேரம் ஆனப் பின்பு, அதனை கழுவி குக்கரில் போட்டு 1 கப் தண்ணீர் மற்றும் சிறிது உப்பு சேர்த்து தீயை குறைவில் வைத்து, 3-4 விசில் விட்டு இறக்கி, அதனை குளிர வைக்க வேண்டும்.
பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம் போட்டு தாளித்து, வெங்காயம் சேர்த்து 5-6 நிமிடம் தீயை குறைவில் வைத்து வதக்க வேண்டும்.
பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 2-3 நிமிடம் வதக்கி, தக்காளி, உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரகப் பொடி, மல்லி தூள், மாங்காய் தூள், மிளகு தூள் சேர்த்து 5-6 நிமிடம் கிளறி, பன்னீரைப் போட்டு, கரம் மசாலா சேர்த்து, தீயை குறைவில் வைத்து, 5 நிமிடம் வதக்கி இறக்க வேண்டும்.
இப்போது சுவையான பன்னீர் சன்னா மசாலா ரெடி!!! இதன் மேல் சிறிது கொத்தமல்லியை தூவி சப்பாத்தியுடன் சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.