Author Topic: செட்டிநாட்டு மட்டன் பிரியாணி  (Read 647 times)

Offline kanmani



    சீரக சம்பா அரிசி - 3 கப்
    மட்டன் - அரை கிலோ
    இஞ்சி - 50 கிராம்
    பூண்டு - 25 பல்
    பெரிய வெங்காயம் - 4
    சின்ன வெங்காயம் - 15
    தக்காளி - 3
    பச்சை மிளகாய் - 4
    கிராம்பு - 4
    பட்டை - 4 துண்டு
    ஜாதிக்காய் - பாதி
    ஏலக்காய் - 4
    மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
    மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
    கரம் மசாலா - கால் தேக்கரண்டி
    இஞ்சி, பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
    தேங்காய் - ஒரு மூடி
    முந்திரி - 10
    தயிர் - அரை கப்
    எலுமிச்சம் பழம் - ஒரு மூடி
    புதினா - ஒரு கட்டு
    மல்லித் தழை - ஒரு கட்டு
    நெய் - அரை கப்
    எண்ணெய் - அரை கப்
    உப்பு
    தாளிக்க:
    கிராம்பு - 3
    பட்டை - 3 சிறிய துண்டு
    ஏலக்காய் - 3
    பிரிஞ்சி இலை - ஒன்று
    சோம்பு - ஒரு தேக்கரண்டி

 

 
   

மட்டனில் கால் கப் தயிர், மஞ்சள் தூள், கரம் மசாலா, இஞ்சி, பூண்டு விழுது மற்றும் ஒரு தேக்கரண்டி உப்பு போட்டு 5 விசில் வரும் வரை வேக வைக்கவும்.
   

பெரிய வெங்காயம் மற்றும் சின்ன வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். நறுக்கிய சின்ன வெங்காயத்தை லேசாக மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். பச்சை மிளகாயை கீறி வைக்கவும். பூண்டை தனியாக அரைத்துக் கொள்ளவும்.
   

பாத்திரத்தை அடுப்பில் வைத்து நெய், எண்ணெய் இரண்டையும் சேர்த்து ஊற்றி காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை தாளித்து, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
   

வெங்காயம் பொன்னிறமானதும் பூண்டு விழுதைப் போட்டு வதக்கவும்.
   

பட்டை, கிராம்பு, ஏலக்காய், ஜாதிக்காய் ஆகியவற்றை நெய்யில் வறுத்து பொடி செய்து கொள்ளவும்.
   

வெங்காயக் கலவை 2 நிமிடங்கள் வதங்கியதும் வறுத்து பொடித்தவற்றை சேர்த்து மிளகாய் தூள் போட்டு வதக்கவும்.
   

5 நிமிடங்கள் வதக்கி எண்ணெய் பிரிந்ததும் நறுக்கிய தக்காளியைச் சேர்க்கவும்.
   

தக்காளி நன்றாக வதங்கி கூழானதும் தயிர் சேர்க்கவும்.
   

தேங்காயுடன் இஞ்சி, முந்திரி சேர்த்து மிக்ஸியில் அரைத்து தண்ணீர் ஊற்றி 4 கப் பால் எடுத்து வைக்கவும். (இந்த பிரியாணியின் விசேஷமே தேங்காயும், இஞ்சியும் சேர்த்து அரைத்து பால் எடுப்பதுதான். இதை கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள். இதனுடன் முந்திரி சேர்ப்பது ரிச்னஸ்காகத்தான்). நான் முந்திரி சேர்க்காமல் செய்துள்ளேன்.
   

தேங்காய் பால், மட்டன் வேக வைத்த தண்ணீர் இரண்டும் சேர்த்து 6 கப் அளந்து ஊற்றவும். உப்பு, புதினா, மல்லித் தழை சேர்க்கவும்.
   

ஒரு கொதி வந்ததும் அரிசியை போட்டு வேகவிடவும். பிரியாணி பாதி வெந்ததும் எலுமிச்சை சாறு பிழிந்துவிடவும். பிரியாணி நன்றாக வெந்ததும் அப்படியே மூடி வைக்கவும்.
   

சுவையான செட்டிநாட்டு மட்டன் பிரியாணி தயார்.