கோதுமை ரவை - ஒரு கப்
நறுக்கிய கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு - ஒரு கப்
கடலைப்பருப்பு - கால் கப்
கீமா - 100 கிராம்
வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
பச்சை மிளகாய் - 2
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - அரை தேக்கரண்டி
பட்டை, ஏலக்காய், கிராம்பு - தலா ஒன்று
தேங்காய் பால் - அரை கப்
இஞ்சி, பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 தேக்கரண்டி
மல்லித் தழை, புதினா
கோதுமை ரவையுடன் கடலைப்பருப்பைச் சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவிடவும். வெங்காயம், தக்காளியை துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். காய்கறிகளை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறி வைக்கவும். மல்லித் தழை, புதினாவை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் தாளித்து, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்.
அதனுடன் தக்காளி, மல்லித் தழை, புதினா, கீமா சேர்த்து வதக்கவும்.
கரம் மசாலா தூள், காய்கறி கலவை மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.
பின் ஊறவைத்த கோதுமை ரவை சேர்த்து 3 கப் தண்ணீர் ஊற்றி, 3 விசில் வரும் வரை வேகவிடவும்.
பிறகு தேங்காய் பால் ஊற்றி கிளறவும். மல்லித் தழை, புதினா தூவி இறக்கவும்.
சுவையான ஹலீம் கஞ்சி (நோன்பு கஞ்சி) ரெடி.