Author Topic: பழுத்த இலையின் விளிம்பில்...  (Read 1004 times)

Offline Sprite

மௌனம் உடையா பொழுதொன்று நிலவும்
முகமெல்லாம் ஒரு சோகம் படரும்
நகரும் நிமிடத்தில் மகிழ்ச்சி மின்னலாய் கீறிச்செல்லும்
அரிதான அன்பிற்கே நாட்கள் அத்தனையும் ஏங்கும்
உடைகூட ஆசை களையும்
உண்ணும் உணவெல்லாம் கடமைக்காகும்
உறக்கமது உச்சி வானம் தேடும்
உறவுகளின் விசாரிப்பு காதில் எங்கோ என்றோ கேட்கும்
பகலெல்லாம் பொழுது கணக்கும்
சட்டைப்பை சில்லறைத் தடவும்
முந்தானை ஓரத்தில் ஒரு கல்லேனும் முடியும்
படுக்க அன்றாடம் சுடுகாடே தேடும்
காதில் தனது பிள்ளை பேசினால் இனிக்கும்
வார்த்தை தடுமாறி பேரனின் ஒன்றோயிரண்டோ கேட்கும்
போகும்வரும் வாசலில் கண்கள் யாருக்கோ காத்திருக்கும்
போகாத உயிரை விட்டுவிட்டுப் பிடித்து வைக்கும்
வாழ்நாள் கனவுகள் வந்துவந்து மறையும்
வாழ்ந்த நாட்களை அசைப் போட்டுத் திரியும்
வந்த துணையின் பிரிவதை யெண்ணி -
பழுத்த மனசது பாவம் கண்­ணீராய் கரையும்
காலத்தை மனதால் கணமும் நொந்தே; நொந்தே; சாகும்!!

Offline Global Angel

Re: பழுத்த இலையின் விளிம்பில்...
« Reply #1 on: November 01, 2011, 02:29:22 PM »
Quote
அரிதான அன்பிற்கே நாட்கள் அத்தனையும் ஏங்கும்
உடைகூட ஆசை களையும்
உண்ணும் உணவெல்லாம் கடமைக்காகும்

nice  ;)
                    

Offline RemO

Re: பழுத்த இலையின் விளிம்பில்...
« Reply #2 on: November 01, 2011, 08:21:49 PM »
super ah iruku machi

Offline செல்வன்

Re: பழுத்த இலையின் விளிம்பில்...
« Reply #3 on: November 08, 2011, 02:26:09 AM »
வயோதிகர்களின் உணர்வை சித்தரிக்கும் அருமையான கவிதை. எனது வாழ்த்துக்கள் sprite.

Offline Yousuf

Re: பழுத்த இலையின் விளிம்பில்...
« Reply #4 on: November 09, 2011, 12:11:47 PM »
Nalla kavithai!