தேவையான பொருட்கள்:
வெந்தயக் கீரை - 3 கப் (நறுக்கியது)
சாதம் - 1 கப்
பச்சை மிளகாய் - 1 (நறுக்கியது)
வெங்காயம் - 1 (நறுக்கியது)
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
கடலை மாவு - 3 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு (பொரிப்பதற்கு)
செய்முறை:
முதலில் ஒரு பௌலில் வெந்தயக் கீரை, சாதம், பச்சை மிளகாய், வெங்காயம், உப்பு, மிளகாய் தூள், பெருங்காயத் தூள் மற்றும் கடலை மாவு சேர்த்து, தண்ணீர் ஊற்றி, பக்கோடா மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும். பின்னர் அதனை சிறு உருண்டைகளாக உருட்டி, ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், உருட்டி வைத்துள்ள பக்கோடாக்களை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.
இப்போது சுவையான வெந்தயக் கீரை பக்கோடா ரெடி!!!