Author Topic: ~ வைரமுத்து ~  (Read 1242 times)

Online MysteRy

~ வைரமுத்து ~
« on: April 07, 2013, 12:09:28 PM »
************
வைரமுத்து
************





நீ...

மணல் பறக்கும் பாலை நிலத்தில்,
பல முற்செடிகளுக்கு இடையே
முளைத்த முல்லைப் பூவா..?

இல்லை கள்ளியில் காய்த்த
நெல்லிக் கனியா..?

உனது கவிதை வரிகள் என்ன
முத்துக்களா..?

இல்லை கடலில் கண்டெடுத்த
சிப்பிகளா..?

உன் கற்பனை என்ன
சேற்றில் தெளிந்த
செந் நீரா..?

இல்லை செவ்விதழில் வழியும்
தேன் ஊற்றா..?

கள்ளிக் காட்டு இதிகாசமும்
கருவாச்சி காவியமும் எழுதிய
உன் கைகளுக்கு,

என் கண்ணின் மணிகளைச்
சேர்த்து காணிக்கை யாக்குவதா..?

இல்லை என் உயிரையும்
எமனுக்கும் ஏமாற்றி உனக்கு
கொடுப்பதா..?

ஒன்றும் புரியவில்லை..!

Offline PiNkY

Re: ~ வைரமுத்து ~
« Reply #1 on: April 07, 2013, 04:53:15 PM »
ரொம்ப நல்ல வரிகள் .. தங்கள் கூறியது மிக உண்மை .. கவிஞ்சர் வைரமுத்து மிக அருமையான கடவுளின் படைப்பு..

Online MysteRy

Re: ~ வைரமுத்து ~
« Reply #2 on: April 07, 2013, 06:25:31 PM »

Offline Varun

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1108
  • Total likes: 18
  • Total likes: 18
  • Karma: +0/-0
  • உண்மையான காதலுக்கு ஏமாற்ற தெரியாது ஏமாற மட்டுமே தெரியும்.
Re: ~ வைரமுத்து ~
« Reply #3 on: April 08, 2013, 02:46:45 AM »
வைரமுத்து கவிதைகள் எப்பாவம் அழகுதான் ...நன்றி தோழி

தனிமை கூட ஒருவித சுகம் தான். உன் நினைவுகள்என் இதயத்தில் உயிராக வாழும்போது.[/move

Online MysteRy

Re: ~ வைரமுத்து ~
« Reply #4 on: April 08, 2013, 11:59:00 AM »
You're Welcome Varun  :) :)

Offline Gayathri

Re: ~ வைரமுத்து ~
« Reply #5 on: April 09, 2013, 04:22:47 PM »
எல்லா
உறவுகளும்
எனக்கு
புரிகிறது - ஆனால்
எனக்கு
நான் - என்ன
உறவு?

- வைரமுத்து -

Offline பவித்ரா

  • FTC Team
  • Hero Member
  • ***
  • Posts: 621
  • Total likes: 929
  • Total likes: 929
  • Karma: +0/-0
  • மாற்றம் ஒன்று தான் மாறாதது ........
Re: ~ வைரமுத்து ~
« Reply #6 on: April 10, 2013, 02:26:42 AM »
oru silaruku thaan name pporuthama irukum antha vagaila vairamuthu solalam peruku ethar pola thiramaiyilum vairamuthu thaan mystery
என்னை  எடை  போடுவதற்கு நீங்கள் தராசும் அல்ல  . நான் விலை பொருளும் அல்ல .....

Online MysteRy

Re: ~ வைரமுத்து ~
« Reply #7 on: April 10, 2013, 11:08:00 AM »
எல்லா
உறவுகளும்
எனக்கு
புரிகிறது - ஆனால்
எனக்கு
நான் - என்ன
உறவு?

- வைரமுத்து -

Thanks For The Reply Gayathiri

Online MysteRy

Re: ~ வைரமுத்து ~
« Reply #8 on: April 10, 2013, 11:09:02 AM »
oru silaruku thaan name pporuthama irukum antha vagaila vairamuthu solalam peruku ethar pola thiramaiyilum vairamuthu thaan mystery


Online MysteRy

Re: ~ வைரமுத்து ~
« Reply #9 on: April 14, 2014, 07:13:20 AM »


பன்னிரண்டு பாலைவன
வருஷங்களுக்குப்பிறகு
அவளை
அவன் பார்க்கநேருகிறது.
எங்கெனில்..

ஒரு ரயில் நிலையத்தில்.

எப்போதெனில்..

ஒரு நள்ளிரவில்.

எதிரெதிர் திசையில்
செல்லும் ரயில்கள்
இளைப்பாறிக்
கொள்ளும் அந்த
இடைவெளியில்..

ரயில்களின் எதிரெதிர்
பெட்டிகளில்
பழைய கண்கள்
நான்கு பார்த்துக்
கொள்கின்றன.

அப்பொழுது-
மனசில் எத்தனை மௌன
பூகம்பம்!

உன்னைப்பார்த்த
ஒரு நிமிஷத்தில்
இமைகளைக்
காணாமல் போட்டு விட்டன
கண்கள்.

நீதானா?

இல்லை-
வேறொருவன்கண்களால்
நான்
பார்க்கிறேனா?

மனசின் பரப்பெங்கும்
பீச்சியடிக்கும் ஒரு
பிரவாகம்.

இதயத்தின்
ஆழத்தில் கிடந்த
உன்முகம்
மிதந்து மிதந்து
மேலே வருகிறது.

ஓ!
வருஷங்கள் எத்தனையோ
வழிந்த பிறகும்..

என்
மார்பு தடவும்
அதே பார்வை..

அதே நீ!
என் பழையவளே!
என்
கனவுகளில் அலையும்
ஒற்றை மேகமே!

உன் நினைவுகளில்
நான்
எத்தனையாவது பரணில்
இருக்கிறேன்?

அறிவாயா?

என்
மீசைக்கும்
என்
காதலுக்கும்
ஒரே வயதென்று
அறிவாயா?

உன் பெயரை
மறக்கடிப்பதில்
தூக்க மாத்திரை கூடத்
தோற்றுப் போனதே!

ஓ!
நீ மாறியிருக்கிறாய்.
உன்
புருவ அடர்த்தி
கொஞ்சம்
குறைந்திருக்கிறது.

உன்
சிவப்பில் கொஞ்சம்
சிதைந்திருக்கிறது
உன்
இதழ்களில் மட்டும்
அதே
பழைய பழச்சிவப்பு.

இப்போதும்
நாம்
பேசப்போவதில்லையா?

வார்த்தைகள் இருந்தபோது
பிரிந்து போனவர்கள்
ஊமையான பிறகு
சந்திக்கிறோமா?

உன் நினைவுகள்
உன் கணவனைப் போலவே
உறங்கியிருக்கலாம்.

ஆனால்
என் நினைவுகள்
உன்னைப் போலவே
விழித்திருக்கின்றன.

ஓ!
இந்த
ரயில் வெளிச்சம்
நீ
அழுவதாய் எனக்கு
அடையாளம் சொல்கிறதே!

வேண்டாம்!
விழியில் ஒழுகும்
வெந்நீரால்
மடியில் உறங்கும்
உன்
கிளியின் உறக்கத்தைக்
கெடுத்து விடாதே!

இதோ
விசில் சத்தம் கேட்கிறது
நம்மில் ஒரு வண்டி
நகரப் போகிறது.
போய் வருகிறேன்!

அல்லது
போய்வா!

மீண்டும் சந்திப்போம்!

விதியை விடவும்
நான்
ரயிலை நம்புகிறேன்.

அப்போது
ஒரே ஒரு கேள்விதான்
உன்னை நான் கேட்பேன்!

"நீயும் என்னைக்
காதலித்தாயா?

Offline Maran

Re: ~ வைரமுத்து ~
« Reply #10 on: April 14, 2014, 11:09:53 AM »
ஐந்து பெரிது, ஆறு சிறிது - வைரமுத்து

  (படித்ததில் பிடித்தது)

"சீ மிருகமே!"

என்று மனிதனை திட்டாதே
மனிதனே..
*
ஏந்த விலங்கும்
இரைப்பைக்கு மேலே
இன்னொரு வயிறு வளர்ப்பதில்லை

எங்கேனும்
தொப்பைக் கிளியோ
தொப்பை முயலோ
பார்த்ததுண்டா?
*
எந்த விலங்குக்கும்
சர்க்கரை வியாதியில்லை தெரியுமோ?
*
எந்த பறவையும்
கூடுகட்டி
வாடகைக்கு விடுவதில்லை
*
எந்த விலங்கும்
தேவையற்ற நிலம்
திருடுவதில்லை
*
கவனி மனிதனே
கூட்டு வாழ்க்கை இன்னும்
குலையாதிருப்பது
காட்டுக்குள்தான்
*
அறிந்தால்
ஆச்சரியம் கொள்வாய்
உடம்பை உடம்புக்குள் புதைக்கும்
தொழுநோய்
விலங்குகளுக்கில்லை
*
மனிதா
இதை
மனங்கொள்

கர்ப்பவாசனை
கண்டு கொண்டால்
காளை பசுவைச்
சேர்வதில்லை
*
ஒருவனுக்கொருத்தி
உனக்கு வார்த்தை
புறாவுக்கு வாழ்க்கை

எந்த புறாவும்
தன் ஜோடியன்றி
பிறஜோடி தொடுவதில்லை
*
இப்பொது சொல்

அறிவில்
ஆறு பெரிதா?
ஐந்து பெரிதா?
*
மரணம் நிஜம்
மரணம் வாழ்வின் பரிசு

மாண்டால் -
மானின் தோல் ஆசனம்
மயிலின் தோகை விசிறி
யானையின் பல் அலங்காரம்
ஒட்டகத்தின் எலும்பு ஆபரணம்
*
நீ மாண்டால்...
சிலரை
நெருப்பே நிராகரிக்கும்
என்பதால்தானே
புதைக்கவே பழகினோம்
*
ஒன்று கேட்கிறேன்

எல்லா விலங்கும்
மனிதனுக்கு பாலூட்டும்

எவளேனும் ஒருதாய்
விலங்குக்குப் பாலூட்டியதுண்டா?
*
"சீ மிருகமே!"
என்று
மனிதனைத் திட்டாதே
மனிதனே
*
கொஞ்சம்பொறு
காட்டுக்குள் என்ன சத்தம்...

ஏதோ ஒரு மிருகம்
இன்னொரு மிருகத்தை
ஏசுகிறது


"சீ மனிதனே!"